பொழுதுபோக்கு

பப்லுவுடன் மீண்டும் இணைந்த ஷீத்தல்? பார்ட்டியில் பண்ண வேலையை பாருங்க

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பப்லு என்கிற பிருத்விராஜ். அதன் பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தார்.

இவருக்கும் முதல் மனைவி பீனாவுக்கும் ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு ஆட்டிஸம் குறைபாடு இருக்கிறது. இருந்தாலும் இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

பீனாவை பிரிந்த அவர் ஷீத்தல் என்பவருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பும் முடிந்துவிட்டதாக சமீபகாலமாகே பேசப்பட்டது. இதனால் சில வாரங்கள் அவர் எங்கேயும், எதுவும் பேசாமல் இருந்தார்.

இந்நிலையில் பப்லு – ஷீத்தல் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது அனிமல் படம் மெகா ஹிட்டாகிவிட்டதாக கூறி படக்குழு சார்பில் பிரமாண்ட பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டது.

அதில் படத்தில் பணியாற்றியவர்கள் கலந்துகொண்டார்கள். அந்தவகையில் பப்லுவும் இதில் கலந்துகொண்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பப்லுவுடன் ஷீத்தலும் அந்தப் பார்ட்டிக்கு வந்ததுதான்.

ராஷ்மிகா மந்தனா, பப்லு, ஷீத்தல் ஆகிய மூன்று பேரும் ஒன்றாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பப்லுவும், ஷீத்தலும் மீண்டும் இணைந்துவிட்டார்கள் என்பதைத்தான் இந்தப் படம் உணர்த்துகிறது என கூறிவருகின்றனர்.

(Visited 44 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!