பொழுதுபோக்கு

நெல்சனுடன் மீண்டும் இணையும் விஜய்… பார்ட்டி வைத்து கூறிய தளபதி

நெல்சன் திலீப்குமாருடன் விஜய் மீண்டும் இணைவார் என ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தெரிவித்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, நடித்திருந்த அந்தப் படத்தின் மீது விஜய் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.

ஆனால் பீஸ்ட் படம் விஜய் ரசிகர்களையே திருப்திப்படுத்த தவறியது. விமர்சன ரீதியாக கடுமையான தாக்குதல்களை சந்தித்தது பீஸ்ட் திரைப்படம்.

குறிப்பாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மீது வரம்பு மீறிய விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஒருகட்டத்தில் அவர் அவமானப்படுத்தப்பட்டார் என்றெல்லாம் பேசப்பட்டன.

சூழல் இப்படி இருக்க பீஸ்ட் படத்தின் ரிலீஸுக்கு பிறகு படக்குழுவை அழைத்து ஒரு விருந்து வைத்தார் விஜய். அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் படுதோல்வியடைந்த படத்துக்கே விருந்தா என்று ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

இந்த சூழலில் அந்த விருந்தில் என்ன நடந்தது என்பது குறித்து லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியிருக்கிறார்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,

“பீஸ்ட் படம் வெளியானதற்கு பின்பு பார்ட்டி ஒன்று நடந்தது. அது பீஸ்ட் படத்துக்க நடக்கவில்லை. நெல்சன் திலீப்குமாருடன் மீண்டும் இணையப்போகிறேன் என்று விஜய் சொல்வதற்காக நடந்த பார்ட்டிதான் அது. அந்தப் பார்ட்டியில்தான், நான் லியோ படத்துக்கு ஒளிப்பதிவு செய்யப்போகிறேன் என்பதையும் அவர் தெரிவித்தார்” என்றார்.

மனோஜ் பரமஹம்சாவின் இந்த பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணி பீஸ்ட்டில் விட்டதை இந்தப் படத்தில் பிடிக்கும்.

ஏனெனில் ஜெயிலர் படம் கொடுத்த வெற்றி நெல்சன் திலீப்குமாருக்கு பெரும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கும். அந்த ஃபார்மோடு விஜய்யுடன் மீண்டும் இணைந்தால் கண்டிப்பாக படம் மெகா ஹிட்தான் என கூறிவருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!