ருமேனியாவிற்குள் ஊடுருவிய போர் விமானம் – ஆபத்தில் நேட்டோ நாடுகள்
தனது வான்வெளிக்குள் ஊடுருவிய F-16 போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ருமேனிய ஜனாதிபதி நிகுசர் டான் (Nicusor Dan) இன்று தெரிவித்துள்ளார்.
நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவில் பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், அந்நாடு பதில் நடவடிக்கை எடுப்பது இதுவே முதல் முறையாகும்.
அந்த ட்ரோன் எங்கிருந்து வந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் நிகுசர் டான் தெரிவித்துள்ளார்.
போலந்து மற்றும் பால்டிக் நாடுகளும் இதுபோன்ற ஊடுருவல்களால் பாதிக்கப்பட்டுள்ளன, இது நேட்டோவின் எல்லைகள் ஆபத்தில் உள்ளன என்ற கவலைகளைத் தூண்டுகிறமை குறிப்பிடத்தக்கது.




