சிகாகோவில் உள்ள மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு!!
சிகாகோவில் மருத்துவமனை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிகாகோவில் உள்ள எண்டெவர் ஹெல்த் ஸ்வீடிஷ் ( Endeavor Health Swedish) மருத்துவமனையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் ஒருவரைக் கண்காணிப்பிற்காக அழைத்துச் சென்றபோது, சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிகாகோ மேயர் பிராண்டன் ஜான்சன் (Brandon Johnson) இந்த நிகழ்வை ஒரு “பேரழிவு” என்று வர்ணித்ததுடன், காவல்துறை அதிகாரிகளுக்கு மனநல ஆதரவு சேவைகள் வழங்கப்பட்டு வருவதையும் உறுதிப்படுத்தினார்.





