சமரசம்: சீன ஜனாதிபதி, சவுதி இளவரசர் பேச்சு!
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் Xi Jinping மற்றும் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் Prince Mohammed bin Salman ஆகியோருக்கு இடையில் தொலைபேசி ஊடாக உரையாடல் இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்கு போர்ச்சூழல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் உலகளாவிய போக்குவரத்து எவ்வித தடையுமின்றி சீராகத் தொடர வேண்டும் என சீன ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையை மீள திறப்பதற்கும், அமைதியை ஏற்படுத்துவதற்கும் சீனா முயற்சித்துவரும் நிலையிலேயே மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான பேச்சு அடுத்த மாதம் நடைபெறுவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.





