ஏமன் மீதான தாக்குதல்கள் – உயர் எச்சரிக்கையில் ஹுதிகள்!
ஏமன் மக்களுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ள உயர்மட்ட எச்சரிக்கையுடன் இருப்பதாக ஹூதி தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் முகமது அல்-அதிஃபி (Mohammed al-Atifi) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் மாத இறுதியில், இஸ்ரேலைக் குறிவைத்து பல நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதன் மூலம், ஹூதிகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரில் முறையாக நுழைந்தனர். இது இந்த மோதலில் ஒரு புதிய முனையைக் குறிக்கிறது.
போர் நிற்கும் வரை தாக்குதல்களைத் தொடரப்போவதாக அந்தப் போராளிக் குழு சபதம் செய்துள்ளது.
முக்கிய இராணுவத் தளங்களைத் தாக்கத் தங்கள் ஆயுதக் களஞ்சியத்தைப் பயன்படுத்துவதுடன், செங்கடலில் உள்ள கடல்வழிப் போக்குவரத்திற்கும் தாக்குதல்களை விரிவுபடுத்துவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளது”
எனவே எந்த தாக்குதல்களை எதிர்கொள்ள தயார் நிலையல் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.





