செய்தி

ரஷ்யாவில் போர் எதிர்ப்பு பாடலை பாடிய இளம் பாடகிக்கு நேர்ந்த துயரம்!

போர் எதிர்ப்பு பாடலை பாடிய இளம் பாடகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நீட்டித்து ரஷ்ய நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

லோகினோவா (Loginova) என்ற பிரபல பாடகி, அக்டோபர் மாதம் தனது நிகழ்ச்சியின் மூலம் போர் எதிர்ப்பு பாடலை  பாடியிருந்தார்.

இந்நிலையில்  பொது ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அப்போது அவரை 13 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குறித்த 13 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அவர் மீளவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது தண்டனை காலத்தை மேலும் நீடித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில்  உக்ரைனில் நடந்த போர் தொடர்பாக பேச்சுரிமையை மீறியதற்காக அவருக்கு எதிராக நீதிமன்றம் தண்டனை வழங்கியமை குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

(Visited 6 times, 7 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!