ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை பௌத்த விகாரை ஒன்றில் 3 சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்

மெல்பேர்ணில் உள்ள இலங்கை பௌத்த விகாரை ஒன்றின் விஹாராதிபதிக்கு எதிராக 03 சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

68 வயதான அவர் இன்று மெல்பேர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

1996ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 13 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மெல்போர்னின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த ஆலயம் ஒரு தாம் பாசல் எனப்படும் பௌத்த மாணவர்களுக்கான வகுப்பறை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஸ்பிரிங்வேல் மற்றும் கீஸ்பரோவை அண்மித்த பகுதிகளில் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக இன்று நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

விஹாராதிபதிகள் தற்போது பிணையில் உள்ளனர், அடுத்த விசாரணை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித