உலகம் செய்தி

கஜகஸ்தான் சுரங்கத் தீ விபத்தில் 25 பேர் பலி

கஜகஸ்தானில் உள்ள சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கஜகஸ்தானில் உள்ள ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துக்குச் சொந்தமான சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தேசியமயமாக்க விரும்புவதால், அதில் முதலீடு செய்வதை நிறுத்த உத்தரவிட்ட அதே நாளில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 23 பேர் காணாமல் போயுள்ளதாகவும், காயமடைந்த 18 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்தின் போது, ​​சுரங்கத்தில் 252 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். கஜகஸ்தானில் 15 சுரங்கங்களை ஆர்சிலர் மிட்டல் வைத்துள்ளது.

கஜகஸ்தான் அரசாங்கம் 02 மாத காலப்பகுதிக்குள் நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கங்களில் இருந்து இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியதன் காரணமாக நிறுவனத்தின் முதலீடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content