ஆஸ்திரேலியா

பிரம்மாண்ட மாற்றத்திற்கு தயாராகும் ஆஸ்திரேலியா

2030ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா காகிதமற்ற மற்றும் நாணயமற்ற சமூகமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வோலட் – Buy Now Pay Later போன்ற சேவைகள் நகர்ப்புறங்களில் இருந்து விலகி கிராமப்புறங்களிலும் பிரபலமாகி வருவதாக கூறப்படுகிறது.

வசதி மற்றும் உடனடித் தன்மை காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டளவில், வெறும் நாணயத்தாள்கள் மட்டுமே பயன்படுத்தி செலுத்தப்பட்ட தொகையின் சதவீதம் 70 சதவீதமாக பதிவு செய்யப்பட்டது.

ஆனால் 2022ஆம் ஆண்டின் இறுதியில் அந்த சதவீதம் 13 சதவீதமாகக் குறைந்துள்ளது. 40 சதவீத ஆஸ்திரேலியர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது தங்கள் பணப்பைகள் அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைக“கு கட்டுப்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களை பயன்படுத்தி நிதி பரிவர்த்தனைகளில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில், 746 மில்லியன் டொலர் மதிப்புள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன, 2022 ஆம் ஆண்டு, அந்த மதிப்பு 93 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த நிலைமையின் கீழ், நாட்டில் நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கு எவ்வகையிலும் தடை விதிக்கப்படவில்லை என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், 2026 ஆம் ஆண்டளவில், ஆஸ்திரேலியாவில் டிஜிட்டல் சமூகம் உருவாக்கப்படும் என்று காமன்வெல்த் வங்கி கணித்துள்ளது, இதனால் மக்கள் நிதி பரிவர்த்தனைகளை மிக எளிதாக செய்ய முடியும்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content