உலகம்

சைபர் குற்றங்கள் – மியன்மாரில் ஏறக்குறைய 1600 பேர் கைது!

  • November 23, 2025
  • 0 Comments

தாய்லாந்து எல்லையில் உள்ள இணைய மோசடிமையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 1600 வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்துள்ளதாக மியன்மார் இராணுவம் இன்று அறிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மியான்மரின் எல்லைப் பகுதிகளில் மோசடி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.   மோசடி கும்பல்கள் இணையம் மூலம் பல குற்றங்களை செய்து வருகின்றன. இந்நிலையில் நவம்பர் 18 முதல் 22 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 1,590 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நேற்று மட்டும் 223 பேர் கைது […]

ஐரோப்பா

லண்டனில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் – 90 பேர் கைது!

  • November 23, 2025
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவை தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது நேற்று மத்திய லண்டனில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது  குறைந்தது 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. போராட்டத்தின்போது இனப்படுகொலையை நான் எதிர்க்கிறேன்” மற்றும் “பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கிறேன்” உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திச் சென்றதாக கூறப்படுகிறது. அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டவர்களில் முதியவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 150 பயணிகளுடன் தடம் புரண்ட ரயில்!

  • November 23, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் ரயில் தடம் புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று பிற்பகல் ஆக்ஸ்பர்க் – புச்லோ – ஃபுசென் பாதையில் (Augsburg – Buchloe – Füssen line) இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்பர்க்கில் (Augsburg)  இருந்து புறப்பட்ட ரயில், வேறொரு பாதைக்கு மாற்றப்படும்போது தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடம் புரண்டதற்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை எனவும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆராய்ந்து வருவதாகவும் […]

இலங்கை

பரீட்சைக்கு முன்பே கசிந்த வினாத்தாள் – CIDயிடம் முறைப்பாடு!

  • November 23, 2025
  • 0 Comments

இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளாதார வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறும் அறிக்கைகளை விசாரிக்க, பரீட்சைகள் திணைக்களம்  குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் துணைத் தேர்வு ஆணையரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய நாட்களில், உயர்தரப் பொருளாதார வினாத்தாள் கசிந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. இருப்பினும்,  உள்ளக விசாரணையில், அத்தகைய சம்பவம் நடந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று திணைக்களம் […]

உலகம்

வியட்நாமில் பேரழிவு : 12 பேர் மாயம்!! 270 மில்லியன் வரை இழப்பு!

  • November 23, 2025
  • 0 Comments

தெற்கு மற்றும் மத்திய வியட்நாமில் பெய்த கனமழை மற்றும் பரவலான வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 235,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள அதேநேரம் 80,000 ஹெக்டேயர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் £270 மில்லியன் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக டக்லக் (Dak Lak) மாநிலம் அதிகமான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு சுமார் 60 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இராணுவம் […]

உலகம்

டைட்டானிக் விபத்துக்கு பிறகு மீட்கப்பட்ட கடிகாரம் – அதிக விலைக்கு விற்பனை!

  • November 23, 2025
  • 0 Comments

டைட்டானிக் கப்பலில் பயணித்த அமெரிக்க தொழிலதிபருக்கு சொந்தமான  கடிகாரம் ஒன்று 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடந்த ஏலத்தில் இந்த கடிகாரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டைட்டானிக் விபத்திற்கு பிறகு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறன. அந்தவகையில் குறித்த கடிகாரமே அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பொருளாகும். ஏப்ரல் 14, 1912 அன்று, நியூயார்க்கிற்குப் பயணம் செய்த டைட்டானிக் கப்பல் பனிப்பாறையொன்றுடன் […]

பொழுதுபோக்கு

நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை வெளியிட்ட மகேஷ் பாபு

  • November 23, 2025
  • 0 Comments

நாக சைதன்யா – மீனாட்சி சவுத்ரி இணையும், கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில் உருவாகி வரும் புராண திரில்லர் படத்திற்கு தற்காலிகமாக ‘விருஷகர்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நாக சைதன்யாவின் 39ஆவது பிறந்தாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. இதனை மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார். இப்படத்தில் லாபட்டா லேடீஸ் நடிகர் ஸ்பர்ஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் கீழ் பி.வி.எஸ்.என் பிரசாத் […]

பொழுதுபோக்கு

’பீஸ்ட்’ மோடில் சமந்தா… நீங்களே பாருங்க…

  • November 23, 2025
  • 0 Comments

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ‘மா இன்டி பங்காரம்’ படத்தில் பிஸியாக உள்ளார். அவரே இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இதற்கிடையில் ஜிம்மில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமந்தா பகிர்ந்துள்ளார், இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்தில், தனது அற்புதமான உடல் மாற்றத்தைக் காட்டி இருக்கிறார். அதற்கு ‘ ஆக்சன் மோட்.. பீஸ்ட் மோட்’ என்று தலைப்பிட்டுள்ளார். […]

உலகம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தருணம் பார்க்கும் கனடா!

  • November 23, 2025
  • 0 Comments

பொருத்தமான நேரத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இன்று அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் உரையாற்றுவதற்கு எந்த அவசர பிரச்சினையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் (Johannesburg) நடந்த G20 தலைவர்கள் கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கனடாவின் எதிர்காலம் மற்றும் புதிய கூட்டாண்மைகளுடன் நாங்கள் மிகவும் பிஸியாக இருக்கிறோம்” எனத் […]

உலகம்

50 மில்லியன் டொலர் வெகுமதி – வெனிசுலாவில் புதிய திட்டத்தை அமுல்படுத்திய ட்ரம்ப்!

  • November 23, 2025
  • 0 Comments

வெனிசுலாவின் தலைநகரின் மீது துண்டுப் பிரசுரங்களை வீச அமெரிக்க இராணுவத்தினருக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்காவின் சமீபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் மதுரோவின் கைது மற்றும் தண்டனைக்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு […]