தீக்கிரையான 25 பேர் வானவேடிக்கையால் தீ பரவியதா?
இந்தியாவின், வடக்கு கோவா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விரிவான விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதி ஊழியர்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆறு பேர் காயமடைந்ததாகவும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார். தீ விபத்து முதன்மையாக சமையல் அறை பகுதியில் ஏற்பட்டதாகவும், அங்கே ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு தீ பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டது. […]













