இந்தியா செய்தி

தீக்கிரையான 25 பேர் வானவேடிக்கையால் தீ பரவியதா?

  • December 8, 2025
  • 0 Comments

இந்தியாவின், வடக்கு கோவா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விரிவான விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதி ஊழியர்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆறு பேர் காயமடைந்ததாகவும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார். தீ விபத்து முதன்மையாக சமையல் அறை பகுதியில் ஏற்பட்டதாகவும், அங்கே ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு தீ பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டது. […]

இலங்கை

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மீது பெண் விமானி குற்றச்சாட்டு

  • December 8, 2025
  • 0 Comments

எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான் என கூறி பெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜரான குறித்த பெண், “எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான். தந்தை உரிமையை நிலைநாட்டுவதற்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குழந்தையின் […]

அரசியல் இலங்கை

இலங்கைக்காக ஆஸ்திரேலியாவிடம் உதவி கோருகிறார் எதிர்க்கட்சி தலைவர் 

  • December 8, 2025
  • 0 Comments

டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்தவேளையிலேயே இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு […]

இலங்கை செய்தி

வெள்ளத்தால் வெளியில் வந்த ஆயுதங்கள்!

  • December 8, 2025
  • 0 Comments

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவில் உள்ள கண்டல்காடு – சாவாறு பகுதியில் வெள்ள நீரின் அடியோட்டத்தால் உருவான குழியிலிருந்து பெருமளவிலான வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கால்நடை வளர்ப்போர் அந்தப் பகுதிக்குச் சென்றபோது சந்தேகத்துக்கிடமான பொருட்களை கண்டு பொலிஸாருக்கு தகவல் தரப்பட்டதின் பேரில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. MILS 36 வகை கைக்குண்டுகள் – 109, T56 வகை துப்பாக்கி ரவைகள் – 1,678 ஆகிய ஆயுதங்கள் வெளிப்பட்டுள்ளன. சம்பவ இடத்துக்குச் சென்ற கிண்ணியா பொலிஸார், திருகோணமலை […]

உலகம் செய்தி

பாலியல் குற்றச்சாட்டு – இலங்கை பேராசிரியர் அமெரிக்காவில் கைது!

  • December 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் ஃபெர்ரிஸ் மாநிலத்தில் (Ferris State) பல்கைலைக்கழக பேராசியராக கடமையாற்றிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்க குடியேற்ற முகவர்கள் கைது செய்துள்ளனர். சுமித் குணசேகர என்ற நபர் நவம்பர் 12 ஆம் திகதி அமெரிக்க குடியேற்ற முகவர்களால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மிச்சிகனில் (Michigan) உள்ள பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் துறையில் உதவிப் பேராசிரியராக கடமையாற்றிய அவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும், நெவாடா பல்கலைக்கழகத்தில் புள்ளிவிவரங்களில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். குணசேகர பிப்ரவரி 1998 இல் […]

உலகம் செய்தி வாழ்வியல்

நாம் தூக்கி எறியும் பொருளை விரும்பி உட்கொள்ளும் ஜப்பான் மக்கள்!

  • December 8, 2025
  • 0 Comments

ஏழைகளின் ஆப்பிள் வாழைப்பழம் இப்படி சொல்லிக் கேள்வி பட்டிருப்போம் இல்லையா? காரணம் சாதாரண விலையில் கூட வாழைப்பழத்தை வாங்க முடியும். இந்த பழத்தை சாப்பிடுவதால் பல நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கும். பழத்தை சாப்பிடும் நாம் அதன் தோலை வீசி விடுவோம். சில பெண்கள் அந்த தோலை முகத்தில் தடவி பொலிவு கிடைக்க முயற்சி செய்வார்கள். ஆனால் ஜப்பானில் வாழைப் பழத்தை தோலோடு சாப்பிடுவார்கள் என்றால் நம்ப முடிகின்றதா? ஆமாம் அவர்கள் தோலையும் சேர்த்து தான் சாப்பிடுவார்கள். […]

இலங்கை

மீட்பு பணிக்காக அமெரிக்க படையினரும் களத்தில்!

  • December 8, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பல நாடுகளும் நேசக்கரம் நீட்டிவரும் நிலையில், மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த 60 மீட்புப் படையினர் கொழும்பு வந்துள்ளனர். அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 ஹெல்குலெஸ் விமானங்களில் உதவிப் பொருட்கள் சகிதம் இவர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நாடு டுமுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் விநியோகிப்பதற்கும் அமெரிக்க படையினர் இலங்கை விமானப்படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை […]

இலங்கை

தொடரும் உதவிகள்: தமிழக நிவாரணமும் கையளிப்பு!

  • December 8, 2025
  • 0 Comments

இலங்கை மக்களுக்காக, தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட 300 மெட்ரிக் தொன் அவசர நிவாரணப் பொருட்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. தமிழக அரசினால் அனுப்பப்பட்ட 1000 தொன் நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதியான 300 மெட்ரிக் தொன் பொருட்கள், இந்திய கடற்படையின் 3 தரையிறங்கு கலங்கள் மூலம், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. மேலும் 700 தொன் உதவிப் பொருட்களை ஏற்றிய மற்றொரு கப்பல் இன்று காலை திருகோணமலையை வந்தடையவுள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பொருட்களை, இந்திய தூதுவர் […]

இலங்கை செய்தி

பலாலியில் தரை இறங்கிய அமெரிக்க வான்படை சரக்கு வானூர்தி.

  • December 8, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் சர்வதேச வானூர்தி நிலையத்தில் அமெரிக்காவின் நிவாரண பொதிகளுடன் கூடிய அமரிக்காவின் US Air Force C-130Js வான்படை சரக்கு வானூர்தி இன்று தரையிறங்கியது. அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J ரக விமானங்கள், அதன் பணியாளர்களுடன் நேற்று கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தன. நேற்று கட்டுநாயக்க வந்தடைந்த இந்த விமானம் வடக்குக்கான நிவாரணப்பொதிகளை இறக்குவதற்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு புறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து இன்றைய தினம் அமெரிக்க வான்படை சரக்கு வானூர்தி பலாலி வானூர்தி நிலயத்தில் தரை […]

இலங்கை

கண்டி மாவட்டத்தில் 35 மாணவர்கள் பலி!

  • December 8, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் கண்டி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அம்மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் 35 மாணவர்களும், 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. அத்துடன், கண்டி மாவட்டத்தில் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சிங்கள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கண்டி மாவட்டத்தில் மொத்தமாக 232 பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் காணாமல்போயுள்ளனர். ஆயிரத்து 800 வீடுகள் முழுமையாகவும், 13 ஆயிரத்து 44 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. பேரிடரால் கண்டி மாவட்டத்தில் 51 […]

error: Content is protected !!