இலங்கை – சிந்துபாத் மயானத்திற்கு அருகிலுள்ள கூட்டு புதைக்குழியில் இருந்து 166 மனித எலும்புகள் மீட்பு!
யாழ்ப்பாணம், செம்மணி சிந்துபாத் மயானத்திற்கு அருகிலுள்ள ஒரு கூட்டுப் புதைகுழியிலிருந்து 166 மனித உடல்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 07 ஆம் திகதி வரை ஐந்தாவது கட்ட அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்தனர். புதைகுழியில் நடத்தப்பட்ட ஸ்கேன் அறிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு ஐந்தாவது கட்ட அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். மேலும், யாழ்ப்பாணம் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜாவின் மேற்பார்வையில், களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறையின் மூத்த பேராசிரியர், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் […]













