கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் பெண் ஒருவர் பாதிப்பு
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தின் வலஞ்சேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். அவர் தற்போது பெரிந்தல்மன்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பெண்ணுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாகவும், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்ததாகவும் அவர்கள் […]













