இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணமாக டெல்லி வந்தடைந்த நியூசிலாந்து பிரதமர்
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணமாக டெல்லி வந்தார். அவரை விமான நிலையத்தில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல் வரவேற்றார். லக்சன் டெல்லியில் தரையிறங்கியதும், இந்தியாவும் நியூசிலாந்தும் “விரிவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும்” சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின என்று மத்திய வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். […]













