இஸ்ரேலிய பிணைக்கைதிகள் மூவரை விடுவித்த ஹமாஸ்
காஸாவில் இரு இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) விடுவித்தது.யார்டென் பிபாஸ், ஒஃபெர் கெல்டரோன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அமெரிக்க இஸ்ரேலியரான கீத் சீகல் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட கெல்டரோன் பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலியக் குடியுரிமை பெற்றவர்.அவரையும் பிபாசையும் காஸாவின் தென்பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் செஞ்சிலுவை அதிகாரியிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.சீகல் அதே நாளன்று காஸா நகர் துறைமுகத்தில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினர் […]













