உலகம் செய்தி

உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்களின் விபரம் வெளியானது

  • December 19, 2024
  • 0 Comments

இந்த ஆண்டுக்கான உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டை Airline Ratings நிறுவனம் செய்துள்ளது என்பதும் சிறப்பம்சமாகும். அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான உலகின் பாதுகாப்பான விமான சேவை நிறுவனமாக Air New Zealand திகழ்கிறது. இங்கு, Qantas மற்றும் Virgin Australia ஆகிய இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன. தரவரிசையில், Etihad Airways நான்காவது இடத்தையும், Qatar Airways ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் […]

வாழ்வியல்

எலும்புகளை அழிக்கும் மிக மோசமான 5 உணவுகள்

  • December 19, 2024
  • 0 Comments

உடல் ஆரோக்கியத்தின் ஆதாரமாக விளங்கும் எலும்புகளை எப்போதும் பலப்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்து, சரியான உணவு முறைகளை பின்பற்றினால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், இப்போதைய காலகட்டத்தில் எலும்பு ஆரோக்கியத்துக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் பல வகையான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். அந்தவகையில் எலும்புகளையே பாதிக்கும் முக்கிய நோய்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எலும்பு புற்றுநோய், குறைந்த எலும்பு அடர்த்தி, எலும்பு தொற்று, ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோனெக்ரோசிஸ், ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோமலாசியா போன்ற […]

இலங்கை செய்தி

இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவு தொடர்பில் விளக்கம்!

  • December 19, 2024
  • 0 Comments

இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது. சட்டமா அதிபரினால் நீதிமன்றுக்கு இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 5 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு தொடர்பில் தேசிய பெறுகைகள் குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பரிந்துரைகளைப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஊடாக அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இன்று (18) அவர் அறியப்படுத்தியுள்ளார். குறித்த கடவுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கான […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் தடை நீக்கம் – முதலாவது தொகுதி வாகனங்கள் இறக்குமதி!

  • December 19, 2024
  • 0 Comments

இலங்கையில் வாகன இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின்னர் அதற்கான தடை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலாவது தொகுதி வாகனங்கள் நேற்றைய தினம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா லங்கா நிறுவனம் குறித்த வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. சுற்றுலாத்துறைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிக்கமைய இந்த வானங்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த நிறுவனம், 26 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதுடன், அதில் பேருந்துகள் மற்றும் வேன் என்பன அடங்குகின்றன. இதற்கிடையில், சாரதி உட்பட […]

இலங்கை

வைத்தியர் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி வழக்கு தாக்கல்

  • December 19, 2024
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் த.சத்தியமூர்த்தியால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாம் தடுப்புக்காவலில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் அவதூறான விடயங்கள் பரப்பப்பட்டமை, கடந்த 9ஆம் திகதி வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைந்து தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட விடயங்களால் தமக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்கு இழப்பீடு வழங்குமாறு […]

ஐரோப்பா

ரஷ்யாவின் இராணுவத் தளபதி படுகொலை – உஸ்பெகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது

  • December 19, 2024
  • 0 Comments

உக்ரைன் உளவுத்துறையில் பணியாற்றிய உஸ்பெகிஸ்தான் பிரஜை ஒருவர் மொஸ்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்புப் படைகளுக்குப் பொறுப்பான இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உக்ரைனில் கொல்லப்பட்ட மிக மூத்த ரஷ்ய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரிலோவ் என்று ரஷ்ய பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன. இந்த கொலைக்கு உக்ரைன் உளவுத்துறை பொறுப்பேற்றுள்ளது. உக்ரேனிய நடவடிக்கைக்காக தான் மொஸ்கோ வந்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக […]

செய்தி விளையாட்டு

ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவிக்க காரணம் என்ன?

  • December 19, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். 38-வயதான அவர் இந்த டெஸ்ட் போட்டி தான் என்னுடைய கடைசி போட்டி என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் என்றால் கூட ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்காது. ஆனால், திடீரென இப்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு இந்த அதிர்ச்சிகரமான […]

செய்தி

உலகளவில் இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • December 19, 2024
  • 0 Comments

உலகளவில் இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோயால் (Colon cancer) பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. Lancet Oncology எனும் மருத்துவ இதழ் அந்த ஆய்வை வெளியிட்டிருக்கிறது. வட அமெரிக்கா, ஐரோப்பா தவிர்த்து உலகளவில் நடுத்தர வருமானம் கொண்ட பகுதிகளில் ஆரம்பக்காலப் பெருங்குடல் புற்றுநோயின் விகிதம் அதிகரிப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது. உயர்வருமானம் கொண்ட மேற்கத்திய நாடுகளில் மட்டும் இந்தப் போக்கு இல்லை. இதற்குமுன்னர் இல்லாத தென் அமெரிக்க, ஆசிய நாடுகளிலும் இது காணப்படுவதாக ஆய்வின் முன்னணி ஆசிரியரும் புற்றுநோய் ஆய்வாளருமான […]

இன்றைய முக்கிய செய்திகள்

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பதவியிலிருந்து விலகத் தயார் – நாமல் பகிரங்க சவால்!

  • December 19, 2024
  • 0 Comments

தனது கல்வித் தகைமை தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பதவியிலிருந்து விலகத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சட்டப் பரீட்சைக்குத் தாம் முகம் கொடுத்த விதம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டள்ளார். இந்த அவமதிப்பு நாமல் ராஜபக்சவை இலக்காகக் கொள்ளவில்லை என்றும், முழுச் சட்ட அமைப்பையும் குறிவைத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச நீதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். குளிரூட்டப்பட்ட அறையில் தனியாகப் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் வாடகை வீடுகளுக்கு நெருக்கடி – மாற்றமடையும் சட்டம்

  • December 19, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பல நகரங்களில் மலிவு விலையில் வீடுகள் இல்லாததால், வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்கள் அதிகரித்து வரும் வாடகைச் செலவுகளை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. வாடகைக் கட்டுப்பாடுகள் வீழ்ச்சியடையும் அபாயத்தில் இருப்பதால், ஜெர்மனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கான செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. அடுத்த ஆண்டு மேலும் பாரிய அளவில் உயரவுள்ளது. ImmoScout24 எனப்படும் ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வுக்கு அமைய, ஜெர்மனியின் முக்கிய நகரங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வாடகைகள் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் புதிய குத்தகைதாரர்கள் […]