பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனுக்கு பல்பு கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.. தலைவர் வேற லெவல்

  • December 23, 2024
  • 0 Comments

ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழடைந்த இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆஸ்கர், கிராமி உள்ளிட்ட விருதுகளை பெற்று புகழடைந்த அவர் ஏராளமான தேசிய விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறார். அவரது இசையமைப்பில் கடைசியாக ஆடு ஜீவிதம், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் வந்தன. அடுத்ததாக காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயனிடம் அவர் உரையாடிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானை பொறுத்தவரை பெரும்பாலும் அமைதியாக இருந்தாலும் தான் பேசும் வார்த்தைகளில் தக் லைஃப் கொடுக்கக்கூடியவர். […]

மத்திய கிழக்கு

காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் : ஹமாஸ்

  • December 23, 2024
  • 0 Comments

திங்களன்று ஹமாஸ் நடத்தும் ஊடக அலுவலகத்தின்படி, மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். அலுவலகம் இஸ்ரேலிய இராணுவத்தின் நடவடிக்கைகளை ஒரு பயங்கரமான, மிருகத்தனமான குற்றம் என்று விவரித்தது, 17 க்கும் மேற்பட்ட டாங்கிகள், புல்டோசர்கள், இராணுவ வாகனங்கள் மற்றும் ட்ரோன்களால் ஆதரிக்கப்படும் டஜன் கணக்கான கனரக ஆயுதம் ஏந்திய வீரர்கள் முகாமை தாக்கியதாகக் கூறினர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள், பாதிக்கும் மேற்பட்ட […]

இந்தியா

இந்தியாவில் நடைபாதையில் ஏறிய லொரி: குழந்தைகள் உட்பட மூவர் பலி, அறுவர் காயம்

  • December 23, 2024
  • 0 Comments

லொரி நடைபாதையின் மீது ஏறியதில் இரு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். அறுவர் காயமடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் திங்கட்கிழமை (டிசம்பர் 23) அதிகாலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. அதிகாலை 1 மணியளவில் டிப்பர் லொரியை வேகமாக ஒட்டி வந்த கஜானன் ஷங்கர் டோட்ரே, 26 நிலை தடுமாற, லொரி நடைபாதையின் மீது ஏறியது. அவர் குடிபோதையில் இருந்ததாக நம்பப்படுகிறது. அப்போது அங்கே உறங்கிக்கொண்டிருந்த ஒன்பது பேரின் உடல்கள் நசுங்கியதில், ஒரு வயது வைபவி ரித்தேஷ் பவார், இரண்டு […]

ஆசியா

சிறப்பு குழுவை அமைக்க தவறினால் ஹான் மீது குற்றம் சுமத்தப்படும்; மிரட்டல் விடுத்துள்ள தென்கொரிய எதிர்க்கட்சி

  • December 23, 2024
  • 0 Comments

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்று தோல்வி அடைந்தார்.அதையடுத்து, அவர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார்.அவர்மீது டிசம்பர் 14ஆம் திகதியன்று குற்றம் சாட்டப்பட்டது.அவரைப் பதவிநீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்க அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற இருக்கிறது. தென்கொரியாவின் இடைக்கால அதிபராக அந்நாட்டுப் பிரதமர் ஹான் டுக் சூ பொறுப்பேற்றுள்ளார்.இந்நிலையில், முன்னாள் அதிபர் யூன் ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்றது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழு ஒன்றை அமைக்க ஹான் […]

இலங்கை

இலங்கையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி பலி : வைத்தியசாலை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு!

  • December 23, 2024
  • 0 Comments

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திரசிகிச்சையின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதற்கு வைத்தியசாலை ஊழியர்களே காரணம் என குழந்தையின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். ஹொரணை பிரதான பாடசாலையில் நான்காம் வருடத்தில் கல்வி கற்கும்  தனுஜ விக்கிரமாராச்சி என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரை பிலியந்தலை வைத்திய நிலையத்திற்கு அனுப்பி வைத்ததாகவும், பின்னர் வைத்தியரின் ஆலோசனையின் பேரில் கடந்த 17 ஆம் திகதி […]

உலகம்

நைஜீரியாவில் கிறிஸ்மஸ் தொண்டு நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67 பேர் உயிரிழப்பு

  • December 23, 2024
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் அங்கு பட்டினியில் சிக்கி தவிக்கின்றனர். இந்தநிலையில் அனம்ப்ரா மாகாணம் ஒகிஜா நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அன்னதானத்துக்கு தன்னார்வ அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. இதனை பெறுவதற்காக ஏராளமானோர் முண்டியடித்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 67 பேர் பலியாகினர். இதேபோல் தலைநகர் அபுஜாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. […]

வட அமெரிக்கா

கனடாவில் நெடுஞ்சாலையில் தொலைபேசியை பயன்படுத்திய நபர் : பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

  • December 23, 2024
  • 0 Comments

கனடாவில் ஓட்டுனர் ஒருவர் கவனச்சிதறலுக்கான தண்டப்பணத்தை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டாவாவில் நெடுஞ்சாலை 417 இல் காரில் இருந்த ஓட்டுனரை அதிகாரிகள் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிடித்துள்ளனர். குறித்த ஓட்டுனர் வாகனத்தை செலுத்தும்போது தொலைபேசியை பாவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரக்கு $615 அபராதம் மற்றும் ஆறு டிமெரிட் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையின் கூற்றுப்படி, அவர் தண்டனையின் மீது 30 நாள் வாகனம் ஓட்ட தடை உட்பட, அதிகரித்த பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. […]

இலங்கை

இந்தியாவுடன் கைகோர்க்கும் இலங்கை: தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள (SLUDI) திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதற்கு இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயல்படும் என்று சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கூட்டாண்மையை முறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் சமீபத்திய இந்திய விஜயத்தின் போது, ​​இந்தியாவின் வெற்றிகரமான மக்களை மையப்படுத்திய டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளை ஏற்றுக்கொள்வதற்கு அவர் விருப்பம் தெரிவித்தார். இந்த முயற்சியானது அஸ்வெசுமா பயனாளிகளுக்கு பணம் செலுத்துதல் போன்ற […]

பொழுதுபோக்கு

வேறு நபரை திருமணம் செய்த ஷீத்தல் – பப்லுவுக்கு கிடைத்த அல்வா

  • December 23, 2024
  • 0 Comments

தமிழில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகர் பிரித்திவிராஜ். 1975 ஆம் ஆண்டு வெளியான, எம்ஜிஆரின் ‘நாளை நமதே’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது . குறிப்பாக பப்லு எம்ஜிஆரின் இளம் வயது தோற்றத்தை இவர் ஏற்று நடித்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க காரணமாக அமைந்தது. ஹீரோ வாய்ப்பு தேடியவருக்கு ஏனோ ஹீரோவாக ஜெயிக்க முடியாமல் போனது. வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பிரபலமான பப்லு, ஏராளமான சீரியல்களிலும் […]

இலங்கை

இலங்கை : கம்பஹாவில் துப்பாக்கிச்சூடு – இளைஞர் ஒருவர் படுகாயம்!

  • December 23, 2024
  • 0 Comments

கம்பஹா, வீரகுல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.