இந்தியா

இந்தியாவில் இணையம் வழியாக 16,000 பேரிடம் ரூ.125 கோடி மோசடி; 21 பேர் கைது

  • December 24, 2024
  • 0 Comments

இணையம் வழியாக 16,000க்கும் மேற்பட்டோரிடம் ரூ.125 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகக் கூறி இந்தியாவில் 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்த இணையக் குற்றவாளிகளிடமிருந்து சிம் அட்டை – கைப்பேசி இடையிலான தொடர்புப் பகுப்பாய்வுத் தரவுகளை குர்கான் காவல்துறையினர் கைப்பற்றினர். அதன்மூலம், கடந்த இரு மாதங்களில் அவர்கள் நாடு முழுவதும் 16,788 பேரிடமிருந்து ரூ.125.6 கோடியை மோசடி செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 16 கைப்பேசிகளும் ஏழு சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை உயரதிகாரி பிரியான்சு திவான் தெரிவித்தார். […]

ஐரோப்பா

இந்த கிறிஸ்துமஸில் நான் அமைதியை எதிர்பார்க்கிறேன் – பிரித்தானிய பிரதமர்!

  • December 24, 2024
  • 0 Comments

சிறந்த, பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிப் பார்ப்பதாக” பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி தற்போது தனது கட்சியின் பொருளாதார மேலாண்மை மற்றும் நாட்டை அவர் எடுத்துச் செல்லும் திசை பற்றிய விமர்சனங்களை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. இந்நிலையில் அவரது வாழ்த்துச் செய்தி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸில், மக்கள் நாடு முழுவதும் பயணம் செய்வார்கள் எனத் தெரிவித்துள்ள அவர், இந்த […]

பொழுதுபோக்கு

குபேரா படத்தின் கதை லீக் – அதிர்ச்சியில் படக்குழு

  • December 24, 2024
  • 0 Comments

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் அவரது 51வது படமாக ‘குபேரா’ என்கிற படத்தில் நடிக்கின்றார். இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் படக்குழு உள்ள நிலையில் தற்போது குபேரா படத்தின் கதைக்களம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, பணத்தைப் பின் தொடர்வதும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் பாதாள உலககுழுவினரின் செயற்பாடு – திட்டமிட்டு தலையிடும் பாதுகாப்பு தரப்பினர்!!

  • December 24, 2024
  • 0 Comments

மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (24) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்ட வகையில் தலையீடு செய்வதாக தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசாங்கம் என்ற வகையில், பாதாள உலகத்தையும் போதைப்பொருள் கடத்தலையும் ஒடுக்குவதில் உறுதியாக உள்ளோம். ஆனால், இது ஒரு காட்சி மற்றும் […]

பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்

  • December 24, 2024
  • 0 Comments

பிரபல திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல், உடல்நலக்குறைவால் காலமானார். திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்ட ஷியாம் பெனகல் 1934 டிசம்பர் 14-ல் பிறந்தார். இந்திய சினிமாவின் திருப்புமுனையாக இவர் இயக்கிய ‘அங்கூர்’ படம் அமைந்தது. 900-க்கும் மேற்பட்ட விளம்பர படங்கள் தயாரித்துள்ளார். கடந்த 14-ம் தேதியன்று தனது 90 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியதாக கூறப்படுகிறது. வயது முதுமை மற்றும் சிறுநீரக […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் : மும்முரமாக இடம்பெறும் தேடுதல் பணி!

  • December 24, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் வடக்கு அவோகா கடற்கரையில் சிறுவன் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் போலீசார் தெரிவித்தனர். சிறுவனைக் கண்டுபிடிக்க கடல் மற்றும் வான்வழி நடவடிக்கை நடந்து வருவதாகவும், சர்ப் லைஃப் சேவர்ஸ், துணை மருத்துவர்கள் மற்றும் வெஸ்ட்பேக் மீட்பு ஹெலிகாப்டர் ஆகியவை சேவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அருகிலுள்ள டெரிகலில் உள்ள மரைன் ரெஸ்க்யூவின் தன்னார்வத் தொண்டர்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவன் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் இரவு வரை […]

ஐரோப்பா

மத்திய தரைக்கடலில் மூழ்கிய ரஷ்ய கப்பல் : இருவர் மாயம், 14 பேர் மீட்பு!

  • December 24, 2024
  • 0 Comments

ரஷ்ய சரக்குக் கப்பல் ஒன்று ஸ்பெயினுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையிலான மத்தியதரைக் கடலில் இன்று (24.12) மூழ்கியதாக கூறப்படுகிறது. இயந்திர அறையில் ஏற்பட்ட கோளாறை தொடர்ந்து மூழ்கியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. குறித்த கப்பலில் இருந்த 02 பணியாளர்கள் மாயமாகியுள்ளதுடன், எஞ்சிய 14 பேர் மீட்கப்பட்டு ஸ்பெயினிற்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. LSEG என்ற கப்பல் ரஷ்ய துறைமுகமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து டிசம்பர் 11 அன்று புறப்பட்டு, அல்ஜீரியாவிற்கும் ஸ்பெயினுக்கும் இடையே நேற்று காணப்பட்டதாக அதிகாரிகள் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

இங்கிலாந்தில் ஈ-விசாவை பெறாத மில்லியன் கணக்கான மக்கள்!

  • December 24, 2024
  • 0 Comments

இங்கிலாந்தில் சுமார் 1 மில்லியன் மக்கள் இன்னும் eVisa ஐப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. பிரிட்டனில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் உள்ள உரிமையை நிரூபிக்கும் குறித்த விசாவாவை பெற்றுக்கொள்வதற்கு டிசம்பர் மாத இறுதிவரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட eVisa திட்டம், குடிமக்கள் அல்லாத அல்லது பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இங்கிலாந்தில் வசிக்கும் உரிமையை நிரூபிக்கும் டிஜிட்டல் அமைப்பாகும். அண்மையில் கூடிய பாராளுமன்ற அமர்வில் உள்துறைச் செயலர் யவெட் கூப்பர், சுமார் 4 மில்லியன் மக்கள் […]

வட அமெரிக்கா

கிரீன்லாந்து ‘விற்பனைக்கு இல்லை’ – டிரம்ப் கருத்துக்கு பதிலடி கொடுத்த பிரதமர்

  • December 24, 2024
  • 0 Comments

கிரீன்லாந்தின் உரிமை, கட்டுப்பாடு அமெரிக்காவுக்கு அவசியம் என்று அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் கூறிய நிலையில், “கிரீன்லாந்து எங்கள் நாடு; அது விற்பனைக்கு இல்லை” என கிரீன்லாந்து நாட்டு பிரதமர் மூட் எகெடே பதிலடி கொடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் இடையே அமைந்துள்ள கிரீன்லாந்து தீவு, அரசியல் ரீதியாக ஐரோப்பாவுடன் இணைந்திருந்தாலும், புவியியல் ரீதியாக வட அமெரிக்கா கண்டத்தை சேர்ந்ததாகும். இந்த நாட்டின் புவியியல் முக்கியத்துவத்தை கருதி, அமெரிக்கா மிகப்பெரிய […]

ஐரோப்பா

துருக்கியில் வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்து : 12 பேர் உடல் கருகி பலி!

  • December 24, 2024
  • 0 Comments

துருக்கியில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிகேசீரின் கரேசி மாவட்டத்தில் உள்ள வெடிபொருள் உற்பத்தி ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் குறித்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது தீயணைப்பு படை மற்றும் பிற சிறப்பு குழுக்கள் தளத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தின் விளைவாக உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பாலிகேசீர் கவர்னர் உறுதிப்படுத்தியுள்ளார். நாசவேலைகளுக்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துள்ள அவர், ஆரம்ப கட்ட […]