இலங்கை செய்தி

இலங்கையில் கொலையில் முடிந்த நண்பர்களின் மோதல்

  • December 26, 2024
  • 0 Comments

பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தில் உள்ள வீதியொன்றுக்கு அருகில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பாணந்துறை வடக்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இரு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மார்புப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் மொரட்டுவை எகொடஉயன பிரதேசத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது. கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் […]

செய்தி

அமெரிக்காவில் விமானச் சக்கரப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்

  • December 26, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் ஹவாயி மாநிலத்தின் காஹுலுய் விமான நிலையத்தில் தரையிறங்கிய யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சடலம் விமானத்தின் சக்கரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. மாண்ட நபர், சக்கரப் பகுதிக்குள் எப்படி நுழைந்தார் என்பது தெரியவில்லை என்று United Airlines நிறுவனம் கூறியது. விமானத்தின் வெளிப்புறத்திலிருந்து மட்டும்தான் அதற்குள் செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சிக்காகோ நகரின் ஓஹேர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Boeing 787-10 ரக விமானத்தில் சம்பவம் நேர்ந்தது. சம்பவத்தை […]

செய்தி

பெல்ஜியத்திலிருந்து சென்ற விமானத்தில் மின்னல் தாக்குதலால் ஏற்பட்ட விபரீதம்

  • December 26, 2024
  • 0 Comments

மின்னல் தாக்கியதால் பிரிட்டிஷ் TUI Airways விமானம் புறப்பட்ட இடத்துக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டது. கடந்த 22ஆம் திகதி விமானம் பெல்ஜியத்திலிருந்து எகிப்துக்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்தில் மின்னல் அதனைத் தாக்கியது. முன்னெச்சரிக்கையாக விமானம் பெல்ஜியத்துக்கு மீண்டும் திரும்பியதாக TUI நிறுவனப் பேச்சாளர் கூறினார். உரத்த சத்தம் கேட்டதாகவும் ஏதோ ஒன்று எரிவதைப் போன்ற வாசனையை நுகர்ந்ததாகவும் TUI பயணி ஒருவர் கூறினார். விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. பயணிகள் எவருக்கும் […]

செய்தி

ஈரானில் வாட்ஸ்அப் செயலிக்கு விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்த திட்டம்

  • December 26, 2024
  • 0 Comments

ஈரானில் வட்ஸ்அப் உள்ளிட்ட கையடக்க தொலைபேசி செயலிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் வைத்து இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. எனினும் அந்தத் தடையைத் தளர்த்தும் தினம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. ஈரானுக்கான புதிய ஜனாதிபதி கடந்த ஜுலை மாதம் நியமிக்கப்பட்டிருந்தார். அதன்போது, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய அவர், இணையத்தளச் செயலிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்த அல்லது நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்தநிலையிலேயே, ஈரானின் புதிய […]

செய்தி

தினமும் 15 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் ஏற்படும் நன்மை

  • December 26, 2024
  • 0 Comments

நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழ, உடற்பயிற்சி அவசியம். ஆனால் இன்றைய துரித கதீலான வாழ்க்கை முறையில், உடற்பயிற்சி செய்ய யாருக்கும் நேரம் இருப்பதில்லை. பயிற்சி செய்ய நேரம் இல்லை என்றாலும், கிடைத்த சிறிது நேரத்தில், 15 நிமிடங்கள் படி ஏறி இறங்கும் பயிற்சி செய்தால், அதனால் கிடைக்கும் நன்மைகள் வியக்கத்தக்க வகையில் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். படி ஏறி இறங்குதல்: தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதை வழக்கமாகக் கொண்டால், அதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் உங்களை […]

விளையாட்டு

உலகை உலுக்கிய விமான விபத்து – அதிகரிக்கும் மரணங்களின் எண்ணிக்கை

  • December 26, 2024
  • 0 Comments

கஜகஸ்தானில் 67 பேருடன் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமானம் தொடங்கிய அஜர்பைஜானில் 29 பேர் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் இயக்கிய விமானம் அக்டாவ் நகருக்கு அருகே விபத்துக்குள்ளான பின்னர் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் தீ பின்னர் அணைக்கப்பட்டது. எம்ப்ரேயர் 190 விமானத்தில் 62 பயணிகளும் 5 பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலில் இருந்தவர்களில் பெரும்பாலோர் அஜர்பைஜானி பிரஜைகள் என்று கூறப்படுகிறது, ஆனால் ரஷ்யா, கஜகஸ்தான் […]

இன்றைய முக்கிய செய்திகள் விளையாட்டு

இலங்கையில் ரயில் பயணிகளுக்கு அறிமுகமாகும் புதிய நடைமுறை

  • December 26, 2024
  • 0 Comments

ரயில் பயணச்சீட்டுக்குப் பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் அணுகல் அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன் புதிய அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளது. அட்டைகளை பயன்படுத்தும் மக்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் அணுகும் வகையில் நவீன தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. அதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன் மூலம் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க முடியும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

கூகுள் குரோமில் அசத்தல் AI வசதி

  • December 26, 2024
  • 0 Comments

கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் குரோம் தளம் உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான இன்டர்நெட் ப்ரௌசர் ஆகும். இந்நிலையில், குரோம் தளத்தில் ஏ.ஐ ஸ்கேம் டிடெக்ஷன் டூல் என்ற புதிய வசதியை நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஏ.ஐ மூலம் மோசடி இணைதளங்களை கண்டறிந்து எச்சரிக்கும் வகையில் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டிங்கரர் Leopova64 என்பவர் தனது X பதிவில் இதுகுறித்து கூறுகையில், கூகுள் குரோமின் கேனரி வெர்ஷனில் “கிளையண்ட் […]

விளையாட்டு

ICC டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்த பும்ரா

  • December 26, 2024
  • 0 Comments

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா. இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கு முன்பாக உத்வேகம் கிடைக்கும்படியாக ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. பிரிஸ்பேனில் 9 விக்கெட்டுகள் எடுத்து 14 புள்ளிகள் முன்னேறியுள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா. அஸ்வினின் அதிபட்ச 904 புள்ளியை சமன்செய்துள்ளார். டிசம்பர் 2016இல் அஸ்வின் இந்த சாதனையை படைத்திருந்தார். கடந்த பிரிபேன் டெஸ்ட்டுடன் அஸ்வின் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஐசிசி டெஸ்ட் பேட்டிங் […]

இலங்கை செய்தி

பரிசு கிடைத்துள்ளதாக வரும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

  • December 26, 2024
  • 0 Comments

பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. சில பரிசுகளை வென்றதாக கூறி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கும் மோசடியாளர்கள் பண மோசடி செய்ததாக பாரிய அளவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில முறைகேடுகள் நடப்பதாக முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாகவும் அவர் கூறினார் இவ்வாறான அழைப்புகள் மற்றும் சம்பவங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு பொதுமக்கள் […]