இலங்கை செய்தி

நடுக்கடலில் ஐவர் பலியான சோகம் – நடந்தது என்ன?

  • July 7, 2024
  • 0 Comments

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட டெவோன் 05 கப்பலின் 06 மீனவர்களில் 05 பேர் கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் உயிரிழந்துள்ளனர். கடலில் மிதந்த பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்தமையாயே இந்த ஐவரும் உயிரிழந்தனர். எவ்வாறாயினும், மீனவர் ஒருவர் இந்த அனர்த்தத்தில் இருந்து தனது உயிரை காப்பாற்றிக் கொண்டதுடன், இது தொடர்பில் அவர் தனது அனுபவம் குறித்து ‘திவயின’ பத்திரிகைக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார். “கடலில் […]

இலங்கை செய்தி

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை காட்டுப்பூனை

  • July 7, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்திற்கு உரிய அனுமதியின்றி ஆப்பிரிக்க காட்டுப் பூனை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. SITES (S.I.T.E.S.) மாநாட்டின் மூலம் பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த காட்டுப் பூனை, இலங்கையின் “சிறுத்தை” போன்ற விலங்கு எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த காட்டுப் பூனைகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக சர்வதேச ரீதியில் இவற்றுக்கு அதிக கிராக்கி நிலவுவதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு […]

இலங்கை செய்தி

பேசிக்கொண்டிருந்த மாணவ, மாணவி மீது மோதிய ரயில்

  • July 7, 2024
  • 0 Comments

அம்பலாங்கொட புகையிரத பாதையில் பயணித்த பாடசாலை மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் இன்று (07) மாலை புகையிரதத்தில் மோதி காயமடைந்துள்ளனர். பேசிக் கொண்டிருந்த போது ரயில் அவர்கள் மீது மோதியதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். படுகாயமடைந்த இரு மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் பதினேழு வயதுடைய மாணவர்கள் எனவும் அவர்கள்  அம்பலாங்கொடையில் உள்ள இரண்டு பிரதான பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவன் அம்பலாங்கொடை ஹிரேவத்த பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், மாணவி அம்பலாங்கொடை […]

ஆசியா

லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தீவிர ராக்கெட்டுகள் தாக்குதல்!

இஸ்ரேலின் வடபகுதியில் லோயர் கலிலீ என்ற இடம் நோக்கி லெபனான் நாட்டில் இருந்து ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் இன்று காலை ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர் இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர். எனினும், இவற்றில் சில ராக்கெட்டுகளை இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் வான் பாதுகாப்பு பிரிவினர் தடுத்து நிறுத்தி முறியடித்தனர். அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.34 மணியளவில், ராக்கெட் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை விடப்பட்டது. லெபனானின் எல்லையையொட்டிய ரமோத் நப்தாலி பகுதியில் இந்த […]

இலங்கை செய்தி

மஹிந்தவுடன் இணைந்து இருப்பதற்கான காரணத்தை வெளிப்படுத்திய ரணில்

  • July 7, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அரசியல் யுத்தம் இருந்த போதிலும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான போது தாங்கள் இணைந்து செயற்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் 27வது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று (06) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடு அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கிய போது பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்த போதும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் […]

விளையாட்டு

20/ 20 சர்வதேச கிரிகெட் போட்டி : எளிதாக வெற்றியை சுவீகரித்த இந்திய அணி!

  • July 7, 2024
  • 0 Comments

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையேயான 20இற்கு 20  சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வருகை தந்த இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 234 விக்கெட்டுகளை குவித்ததுடன், போட்டியை நடத்தும் ஜிம்பாப்வே அணி 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

ஐரோப்பா

பிரான்சில் சட்டமன்றத் தேர்தலுக்கான தீர்க்கமான சுற்றுப் போட்டிகள் ஆரம்பம்

  • July 7, 2024
  • 0 Comments

577 இடங்களைக் கொண்ட பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில் மீதமுள்ள 501 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பிரான்சின் உடனடி சட்டமன்றத் தேர்தல்களின் இரண்டாவது மற்றும் தீர்க்கமான சுற்று ஞாயிற்றுக்கிழமை மெட்ரோபொலிட்டன் பிரான்சில் தொடங்கியது. பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் வெளியிட்ட முடிவுகளின்படி, ஜூன் 30 அன்று நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தல்களில் பிரெஞ்சு தீவிர வலதுசாரிக் கட்சியான தேசிய பேரணி (RN) 37 இடங்களைப் பெற்று முன்னிலை வகித்தது. RN ஐத் தொடர்ந்து, இடதுசாரிக் கட்சிகளின் தேர்தல் கூட்டணியான நியூ பாப்புலர் […]

உலகம்

பொலிஸாரின் அடக்கு முறை : மன்னிப்பு கோரிய அதிபர் வில்லியம் ரூட்டோ

  • July 7, 2024
  • 0 Comments

மேற்கு நாடான கென்யாவில் புதிய வரி விப்திப்பு மசோதாவை எதிர்த்து போராடியவர்களிடம் போலிஸார் அடக்குமுறையை கையாண்டதற்காக அந்த நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ மன்னிப்பு கோரினார். இது குறித்து X தளத்தில் கெவின் மனோரி என்ற இளைஞர் பொலிஸார் தன்னை கைது செய்த்து குறித்து வெளியிட்ட பதிவுக்கு அளித்த பதிலில் ரூட்டோ இவ்வாறு மன்னிப்பு கோரினார். கென்யாவில் அதிகரித்து வரும் விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து கடந்த 2022ம் ஆண்டில் ஆட்சியை பிடித்த ரூட்டோ நாட்டின் பொருளாதாரத்தை […]

ஆசியா

கடுமையான குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தில் 13 தைவானியர்களை நாடு கடத்திய இந்தோனேஷியா

  • July 7, 2024
  • 0 Comments

கடுமையான குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படும் 13 தைவானிய நாட்டவர்கள் இந்தோனீசியாவிலிருந்து தைவானுக்கு நாடு கடத்தப்பட்டனர்.தைவானில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 5ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் இந்தோனீசிய குடிநுழைவுத் துறை இதனை தெரிவித்தது.இணையக் குற்றங்கள், கள்ளப் பணத்தை நல்லப் பணமாக மாற்றுவது, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் 13 தைவானியர்களும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. “குடியேற்ற அதிகாரிகளின் முழுமையான ஆய்வுக்குப் பிறகு பதின்மூன்று வெளிநாட்டினரும் தைவானில் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது […]

இலங்கை

200 க்கும் மேற்பட்ட பொதுத்துறை தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் உள்ள 200ற்கும் மேற்பட்ட அரச சேவை தொழிற்சங்கங்கள் நாளை (8) மற்றும் நாளை மறுதினம் (9) சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. தற்போது நிர்வாக சேவை பிரிவின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ரூ .25,000 சிறப்பு மாதாந்திர கொடுப்பனவை அரசாங்கம் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று எதிர்ப்பு தொழிற்சங்கங்கள் கோருகின்றன. அத்துடன், இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் […]