ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் சேதமடைந்த உக்ரைன் எரிசக்திக் கட்டமைப்பு
ரஷ்யா நடத்திய வானூர்தி, ஏவுகணைத் தாக்குதல்களில் வியாழக்கிழமையன்று (ஜூன் 20) உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்பு சேதமடைந்ததாக உக்ரேனிய எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஓர் எரிசக்தி நிலையத்தில் ஊழியர்கள் மூவர் காயமுற்றதாகவும் பயனீட்டாளர்கள் சிலர் மின்தடையை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. உக்ரேன் எரிசக்தி நிறுவனமான டிடிஇகே, தனது வெப்பநிலை ஆலைகளில் ஒன்று பெரும் சேதத்துக்கு உள்ளானதாகக் கூறியது. தற்போதைய இளவேனிற்காலத்தில் ரஷ்யா, உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்பைக் குறிவைத்து வானூர்தி, ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது; அதனைத் தொடர்ந்து உக்ரேனின் எரிசக்தி உற்பத்தி […]













