இலங்கை

தமிழரசுக்கட்சியில் தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாகம் : எழுந்துள்ள சர்ச்சை- இரா.சாணக்கியன் அதிரடி

”இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு மட்டுமே பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகமே சட்ட ரீதியாக இயங்கும்” எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்று திருகோணமலையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலளார் சந்திப்பு இன்று களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது கட்சி காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில், ”தமிழரசுக்கட்சியின் மாநாட்டுக்கான ஆலோசனைக்கூட்டமாக தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போது சுமந்திரன் அவர்களை உபதலைவராக நியமிக்குமாறு சிறிதரன் கோரியிருந்தார். எனினும் அதனை […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பிஸ்கட் சாப்பிட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

  • January 28, 2024
  • 0 Comments

மேற்கு இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்தவர் ஒர்லா பாக்செண்டேல் (25). தொழில்முறை நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடர்வதற்காக பாக்செண்டேல் நியூயார்க்கிற்குச் சென்றார். கடந்த 11ம் திகதி பாக்செண்டேல் வெண்ணிலா புளோரன்டைன் எனப்படும் பிஸ்கெட்டை சாப்பிட்டார். இந்த நிலையில் சிறிது நேரத்திற்குள் உடல் முழுவதும் ஒவ்வாமை ஏற்பட்டு பாக்செண்டேல் உயிரிழந்தார் விசாரணையில், அவருக்கு வேர்க்கடலை அலர்ஜி உள்ளதும், அவர் சாப்பிட்ட பிஸ்கெட்டில் வேர்க்கடலை சேர்க்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. பிஸ்கெட் பாக்கெட்டில் வேர்க்கடலை குறிப்பிடப்படாததால் அது தெரியாமல் சாப்பிட்டதால் பாக்செண்டேல் […]

இலங்கை

அனைத்து தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்திற்கு….!

  • January 28, 2024
  • 0 Comments

அனைத்து தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்திற்கும்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு துண்டு பிரசுரம் வழங்கிய போது ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரன் அவ்விடயத்தை ஏற்க மறுத்துள்ளார். இன்றைய தினம் வருகை தந்த சுமந்திரன் தவிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னால் மகாண சபை உறுப்பினர்கள் கட்சியின் மத்திய குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பக் குழுவின் சிபார்சுகளை ஏற்றுக் கொண்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் […]

ஐரோப்பா

மேற்கு ஆபிரிக்க நாடு ஒன்றிற்கு 25,000 டன் கோதுமையை பரிசளித்த விளாடிமிர் புடின்

  • January 28, 2024
  • 0 Comments

மேற்கு ஆப்ரிக்க நாடு ஒன்றிற்கு 25,000 டன் கோதுமையை ரஷ்யா அரசாங்கம் இலவசமாகவே அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை குறித்த தகவலை உறுதி செய்துள்ள அமைச்சர் ஒருவர், ஒப்பிட முடியாத பரிசு என நெகிழ்ந்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோ கடந்த 2022ல் இருமுறை ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்கொண்ட பின்னர் ரஷ்யா உடனான உறவை பலப்படுத்திக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் புர்கினா பாசோவில் தங்கள் தூதரகத்தை ரஷ்யா மீண்டும் திறந்துள்ளது. சோவியத் ஒன்றியம் சிதறிய பின்னர் […]

ஐரோப்பா

பிரித்தானிய தபால் துறை தலைவர் பதவி விலகல்

நூற்றுக்கணக்கான துணை போஸ்ட் மாஸ்டர்கள் தவறுதலாக தண்டிக்கப்பட்ட ஊழலைச் சுற்றி நடந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் தபால் அலுவலகத் தலைவர் பதவி விலகியுள்ளார். ஹென்றி ஸ்டாண்டனை பதவியை விட்டு விலகுமாறு வணிக செயலாளர் கெமி படேனோக் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. . விரைவில் தற்காலிக தலைவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவில் தபால் துறையில், sub-postmaster என்னும் பொறுப்பிலிருந்த சுமார் 700க்கும் மேற்பட்ட தபால் அலுவலகப் பணியாளர்கள் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, […]

இலங்கை விளையாட்டு

இலங்கை கிரிக்கட் மீதான தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கிய ஐசிசி

  • January 28, 2024
  • 0 Comments

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கட் மீது விதிக்கப்பட்டுள்ள தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆசியா

மீண்டும் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா!

  • January 28, 2024
  • 0 Comments

வட கொரியா நாட்டின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு பெரிய இராணுவ கப்பல் கட்டும் தளத்திற்கு அருகே பல கப்பல் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நடவடிக்கையானது அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றுடன் பதற்றங்களை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென் கொரியா மற்றும் ஜப்பானில் ஏவுகணை பாதுகாப்பு மற்றும் குவாம் உட்பட பசிபிக் பகுதியில் உள்ள தொலைதூர அமெரிக்க இலக்குகளை முறியடிப்பதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் முயற்சிகளையே இந்த சோதனைகள் பிரதிபலிப்பதாக சர்வதேச […]

ஆசியா

3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி ஈரான் சாதனை…

  • January 28, 2024
  • 0 Comments

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சொந்த தயாரிப்பான சிமோர்க் ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஈரான் விண்வெளி நிறுவனம் தயாரித்துள்ள இந்த செயற்கைக்கோள்கள், தகவல்தொடர்பு மற்றும் புவிசார் தொழில்நுட்பம் குறித்த பயன்பட்டுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் சோதனைகள் நடத்தியிருப்பதன் மூலம், ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தீர்மானத்தை மீறி ஈரான் செயல்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.மேலும், அணு ஆயுத திறன் வாய்ந்த […]

பொழுதுபோக்கு

இலங்கையில் வெளிநாட்டு படப்பிடிப்பு – திடீரென நடந்த விபரீதம்

  • January 28, 2024
  • 0 Comments

கொட்டகலை மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கு இடையில் விசேட புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மலையக புகையிரத பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக கொடுக்கப்பட்ட ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. சிறப்பு அனுமதியின் கீழ், படப்பிடிப்பிற்காக ஜனவரி 24 முதல் 29 வரை இந்த 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்களை ரயில்வே திணைக்களம் வழங்கியுள்ளது. படப்பிடிப்புகளை முடித்துக் கொண்டு இன்று கொழும்பு திரும்பும் போதே ரயில் தடம் புரண்டமை குறிப்பிடத்தக்கது.  

ஆசியா

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

லெபனானில் உள்ள ஜிப்கின் மற்றும் ஹவுலா நகரங்களில் உள்ள இரண்டு ஹெஸ்புல்லா தளங்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். ஈரானிய ஆதரவு பெற்ற லெபனான் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. லெபனானில் இருந்து முந்தைய ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

error: Content is protected !!