ஆசியா

காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் தீவிர மோதல்: 48 மணி நேரத்தில் 350க்கும் மேற்பட்டவர்கள் பலி

காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேலிய இராணுவத்தின் முற்றுகையால் நாசர் மருத்துவமனை மருத்துவக் கழிவுகளால் நிரம்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெருக்களில் சிதறிக் கிடக்கும் டஜன் கணக்கான உடல்களை மருத்துவக் குழுக்களால் அடைய முடியவில்லை, உள்ளூர்வாசிகள் இறந்தவர்களை கான் யூனிஸ் கல்லறைக்கு எடுத்துச் செல்ல முடியாததால் நகரின் நாசர் மருத்துவமனையின் முற்றத்தில் அடக்கம் செய்ய வேண்டியிருந்தது எனத் தெரிவித்துள்ளது.

உலகம் செய்தி

2023ல் இந்தியர்களுக்கு விசா வழங்கி சாதனை படைத்த அமெரிக்கா

  • January 29, 2024
  • 0 Comments

இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகக் குழு 2023 இல் 1.4 மில்லியன் அமெரிக்க விசாக்களை செயலாக்கியது, இது முன்னெப்போதையும் விட அதிகமாகும், மேலும் பார்வையாளர் விசா நியமனம் காத்திருப்பு நேரத்தை 75 சதவீதம் குறைத்துள்ளது. இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகங்கள், இப்போது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு 10 அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களில் ஒருவரை இந்தியர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்று கூறியுள்ளது. “2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் தூதரகங்கள் 1.4 மில்லியன் அமெரிக்க விசாக்களைப் பதிவு […]

விளையாட்டு

INDvsENG – அடுத்த போட்டியிலிருந்து முக்கிய இரு வீரர்கள் விலகல்

  • January 29, 2024
  • 0 Comments

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர். அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் மற்றும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் மதுபான விடுதி ஒன்றின் கழிவறைக்குள் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை…!

  • January 29, 2024
  • 0 Comments

இங்கிலாந்திலுள்ள மதுபான விடுதி ஒன்றின் கழிவறைக்குள் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியது. இங்கிலாந்தின் Leedsஇல் அமைந்துள்ள Three Horseshoes pub என்னும் மதுபான விடுதியிலுள்ள கழிவறை ஒன்றில், அப்போதுதான் பிறந்த பெண் குழந்தை ஒன்று உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், விடுதியில் பரபரப்பு ஏற்பட்டது.நேற்று, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில், அந்த குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த குழந்தையைப் பெற்ற தாய்க்கு பொலிஸார் அழைப்புவிடுத்துள்ளார்கள். இப்படி ஒரு குழந்தையை பெற்ற அந்த […]

இலங்கை

தொம்பகொட இராணுவ முகாமில் உள்ள குளத்தில் 23 வயது இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு!

  • January 29, 2024
  • 0 Comments

ஹொரணை, தொம்பகொட இராணுவ முகாமில் உள்ள குளத்தில் இருந்து இன்று (29) அதிகாலை இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த முகாமில் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய எதிலிவெவ, தெலுல்ல கொலனியை சேர்ந்த 23 வயதுடைய தரிந்து லக்ஷான் என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகளை ஹொரணை நீதவான் இன்று (29) மேற்கொண்டார்.எனினும், உயிரிழந்த இராணுவ வீரரின் உறவினர்கள் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பா

உக்ரைனின் ஜகர்பட்டியா மாகாணத்தை கைப்பற்ற ஹங்கேரி அழைப்பு

ஹங்கேரிய தீவிர வலதுசாரித் தலைவர் லாஸ்லோ டோரோஸ்காய், ரஷ்யா போரில் வெற்றி பெற்றால் உக்ரைனின் ஜகார்பட்டியா பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். சிறுபான்மை உரிமைகள் பிரச்சினை ஹங்கேரி மற்றும் உக்ரைன் இடையே உராய்வுகளை உருவாக்கியுள்ளது, உக்ரைனிலும் ஹங்கேரிய புலம்பெயர்ந்த பிற அண்டை நாடுகளிலும் உள்ள ஹங்கேரிய இனத்தவர்களுக்கான சுயாட்சியை அதிகரிக்க வேண்டும் என்று தாயகம் அழைப்பு விடுத்துள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மூவர் சுட்டுக்கொலை

  • January 29, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ளது கிரனாடா ஹில்ஸ். இங்கு உள்ள லெட்டோ அவென்யூவில் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்பதாக பொலிஸாருக்கு அவசர அழைப்பு வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்றனர். பொலிஸார் சம்பந்தப்பட்ட வீட்டின் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்ததில், 2 பெண்கள் உள்பட 4 பேர் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு டாக்டர்கள் குழுவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் […]

இலங்கை

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல கைது!

  • January 29, 2024
  • 0 Comments

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் படி, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (29) கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார். அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய பெண் கைது!

பொலிஸ் உத்தியோகத்தரை தகாத வார்த்தையில் திட்டி பெண் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை தெவிநுவர மணிக்கூண்டுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தனது வாகனத்தின் பாதையை இடையூறு செய்ததாக தெரிவித்து குறித்து பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். பின்னர் குறித்த அதிகாரிகள் வழங்கிய அறிவித்தலின் படி, குறித்த பெண் […]

மத்திய கிழக்கு

துருக்கியில் தேவாலயத்துக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய முகமூடி அணிந்த நபர்கள்!

  • January 29, 2024
  • 0 Comments

துருக்கி நாட்டில், நேற்று தேவாலயம் ஒன்றில் ஆராதனை நடந்துகொண்டிருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஒருவர் தலையில் குண்டுபாய, தேவாலயத்தில் இருந்தவர்கள் தரையில் படுத்துக்கொள்ள, அப்போது எதிர்பாராவிதமாக துப்பாக்கியுடன் வந்தவர்களில் ஒருவருடைய துப்பாக்கி செயல்படாமல் போயுள்ளது. உடனடியாக இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.இந்த துயர சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார், பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் Tuncer Cihan (52) என்பவர் பலியான நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு அவரைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக இருக்கலாமேயொழிய தேவாலயத்தைக் குறிவைத்து […]

error: Content is protected !!