இலங்கை

MP எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை

  • September 22, 2023
  • 0 Comments

2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தமை அல்லது பங்குபற்றியமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (22) குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது. எம்.கே.சிவாஜிலிங்கம் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (22) முன்னிலையாகியபோது, குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது.இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட […]

இலங்கை

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு துண்டு பிரசுரம் விநியோகம்

  • September 22, 2023
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப் பிரசுர விநியோகம் இன்று (22) மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்களை மையப்படுத்தியும் , மன்னார் நகர பகுதியிலும் தியாக தீபத்தின் வரலாற்று நினைவுகளை உள்ளடக்கிய துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. நேற்று (21) மற்றும் இன்றைய தினம் (22) வடக்கு தழுவிய ரீதியில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

மன்னாரில் 39 வது தேசிய மீலாதுன் நபி விழா- மீளாய்வுக் கூட்டம்

  • September 22, 2023
  • 0 Comments

மன்னாரில் நடைபெற இருக்கும் 39 வது தேசிய மீலாதுன் நபி விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான மீளாய்வுக் கூட்டம் இன்று (22) காலையில் நடைபெற்றது மன்னார் மாவட்ட செயலகத்தில் கடந்த ஆகஸ்ட் நடைபெற்ற முன்னாயத்த கலந்துரையாடலை தொடர்ந்து மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வை.பரந்தாமன் தலைமையில் இவ்விழா சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் இன்றும் (22) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மன்னாரில் நடைபெற இருக்கும் 39 வது தேசிய மீலாத்துன் நபி […]

பொழுதுபோக்கு

ஏ.ஆர்.ரகுமான் விவகாரம்! வழக்கு பதிவு செய்த பொலிஸார்

  • September 22, 2023
  • 0 Comments

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி காரணமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தின் மீது, தற்போது கானத்தூர் பொலிஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்ட நிகழ்ச்சி ‘மறக்குமா நெஞ்சம்’. அப்போது மழை காரணமாக இந்த நிகழ்ச்சி தடைபட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி மழை உட்பட எந்த காரணத்திற்காகவும் தடைபட்டு […]

இலங்கை

மேய்ச்சல் தரை காணியை பாதுகாக்குமாறு வலியுறுத்தி விவசாய அமைப்பினர் இணைந்து கவனஈர்ப்பு போராட்டம்

  • September 22, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் விவசாய அமைப்பினர் இணைந்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் ஒன்றியத்தின் அதிகாரசபையின் தலைவர் அ.ரமேஸ் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை காணியை பாதுகாக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை பண்ணையாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். ”பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தில் கைவைக்காதே”, ”மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதி […]

இலங்கை

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என மீண்டும் கட்டளை பிறப்பித்த யாழ். நீதவான் நீதிமன்றம்

  • September 22, 2023
  • 0 Comments

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் (22) கட்டளை பிறப்பித்தது. தியாகதீபன் திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த செப்டம்பர் 19 ம் திகதி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்து, செப்டம்பர் 20ம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டமா […]

இலங்கை

தீவிரமடையும் நிபா வைரஸ் : கட்டுப்படுத்த கவனம் செலுத்துங்கள்- சஜித் பிரேமதாச

  • September 22, 2023
  • 0 Comments

“நிபா வைரஸ்” இந்தியா, வங்காளதேசம், சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை அதிக ஆபத்துள்ள வைரஸ் என அறிவித்துள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இதனை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வைரஸின் இறப்பு விகிதம் 40 முதல் 75 […]

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு

  • September 22, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரி 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இவ் வரி உயர்வு இன்று (செப்.,22) அமலுக்கு வருகிறது. எவ்வாறாயினும், இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை சந்தையில் அதிகரிக்காது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

இலங்கை

அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட திருகோணமலை சுகாதார உத்தியோகத்தர்கள்

  • September 22, 2023
  • 0 Comments

வைத்தியசாலையில் நிலவிவரும் ஆளனி மற்றும் மருந்துகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி திருகோணமலை பொது வைத்தியசாலை சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று (22) மதியமளவில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தார்கள். திருகோணமலை வைத்தியசாலையில் நிலவிவரும் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் குறித்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அகில இலங்கை ரீதியாக இடம்பெறும் இப்போராட்டத்தை அகில இலங்கை சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் […]

இந்தியா

சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

  • September 22, 2023
  • 0 Comments

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் தொடர்பான வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 24 ஆம் திகதி வரை நீட்டித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்நிலையில், திறன் மேம்பாட்டு வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், நாயுடு தாக்கல் செய்த எஃப்ஐஆர் ரத்து மனு மீதான விசாரணை இன்று மதியம் 1:30 […]

error: Content is protected !!