இந்தியா

நடிகர் விஜய்யின் மேடைப் பேச்சு! தமிழக அரசியலில் எழுந்துள்ள சர்ச்சை

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பேசுபொருளாகியுள்ள நிலையில், நேற்றுமுன்தினம் நடைபெற்ற மாணவர் பாராட்டுவிழாவில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் நாட்டின் அரசியல் மேடையில் பேசுபொருளாகியுள்ளன. அத்துடன் தி.மு.க. அரசுடன் தொடர்ந்தும் முரண்பட்டுவரும் தமிழ் நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியையும் நடிகர் விஜய் மறைமுகமாக சீண்டியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது. நடிகர் விஜய் நேற்றுமுன்தினம் வெளியிட்ட கருத்துக்கள் பாரிய அளவான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், முக்கியமாக பெரியார், அண்ணா, காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும் எனவும் புதிய நல்ல […]

பொழுதுபோக்கு

அஜித்தின் 62-வது படம் என்ன தெரியுமா? வெளியான புதிய அப்டேட்

நடிகர் அஜித்குமார் ‘துணிவு’ திரைப்படத்திற்கு பிறகு தற்போது மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அஜித்தின் 62-வது படமான இதற்கு ‘விடாமுயற்சி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க போவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு

போராளிக்குழுக்களுடன் மோதலில் ஈடுபட்ட இஸ்ரேல் – மூவர் பலி!

  • June 19, 2023
  • 0 Comments

பாலஸ்தீன போராளிகளுடன், இஸ்ரேல் மேற்கொண்ட சண்டையில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனின் நகரில் நடைபெற்ற குறித்த மோதலில்,  15 வயது சிறுவன் உட்பட மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரகிள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த சண்டையில் பல இஸ்ரேலிய துருப்புக்கள் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களும் பல மாதங்களாக வன்முறையில் சிக்கித் தவிக்கின்றனர், முக்கியமாக […]

இலங்கை

கோட்டாவிற்கு ஏற்பட்ட நிலை ரணிலுக்கு ஏற்படாது – மஹிந்தானந்த உறுதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏற்படாதவாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுதியளிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கோட்டாபய ராஜபக்ஷ அழைத்ததாகவும், ஆனால் அதற்கான தைரியம் அவருக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் சவாலை ஏற்றுக்கொண்டு அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கிய ஒரே […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 34 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

  • June 19, 2023
  • 0 Comments

பிரித்தானிய மக்கள் தற்போது வெப்ப அலை போன்ற சூழலை அனுபவித்துவரும் நிலையில், நாட்டின் 34 பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனடியாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள யார்க்ஷயர் மற்றும் வடகிழக்கை சேர்ந்த சுற்றுச்சூழல் முகமை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.ஜூன் 18 சனிக்கிழமை, நாடு முழுவதும் பல வானிலை எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன, அத்துடன் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

80 சென்டிமென்டர் கிழக்கே சாய்ந்து இருக்கும் பூமி – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

  • June 19, 2023
  • 0 Comments

பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நாம் வாழும் பூமி 1993 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 80 சென்டிமென்டர் கிழக்கே சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக பூமியின் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சி தகவலில் 1993ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மட்டும் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீர் மனிதர்களால் உறிஞ்சப்ப்ட்டு உள்ளது, இது […]

உலகம்

பதட்டங்களுக்கு மத்தியில் சீன ஜனாதிபதியை சந்தித்தார் பிளிங்கன்!

  • June 19, 2023
  • 0 Comments

அமெரிக்க-சீனா பதட்டங்களைத் தணிக்கும் முயற்சியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று (19) சந்தித்துள்ளார். இதன்போது இரு தரப்பும் முன்னேற்றம் அடைந்துவிட்டதாகவும், “சில குறிப்பிட்ட விடயங்களில்” விரிவாகப் பேசாமல் உடன்பாடுகளை எட்டியுள்ளதாகவும் சீன அதிபர் சி ஜின் பிங் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்  “ஜனாதிபதி பைடன் மற்றும் சி ஜின்பிங்  ஆகியோர் பாலியில் அடைந்த  பொதுவான புரிதல்களைப் பின்பற்ற இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். Blinken மற்றும் மூத்த சீன அதிகாரிகளுக்கு இடையேயான […]

இந்தியா

மருத்துவம் சார்ந்த படிப்புக்கான விண்ணப்பம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2023-24ம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, 2023-2024ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு (பாராமெடிக்கல்) அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை […]

ஐரோப்பா

பிரேசிலில் கடுமையான சூறாவளி : 13 பேர் பலி!

  • June 19, 2023
  • 0 Comments

தெற்கு பிரேசிலில் வீசிய வெப்பமண்டல சூறாவளிக் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது. பிரேசிலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகரான போர்டோ அலெக்ரே உட்பட ரியோ கிராண்டே டோ சுல் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, மணிக்கு 101.9 கிலோமீட்டர் (60 மைல்) வரை காற்றின் வேகம் பதிவுசெய்யப்பட்ட நிலையில், டிராமண்டாய் நகரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

uk வின் GSP திட்டத்திற்கு பதிலாக அமுலுக்கு வந்த புதிய திட்டம்!

  • June 19, 2023
  • 0 Comments

ஐக்கிய இராச்சியத்தின்  அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின்  புதிய வர்த்தகத் திட்டம் (DCTS) இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. தற்போதைய விருப்பத்தேர்வுகளின் பொதுமைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு (GSP) பதிலாக இந்த திட்டம் அமுலுக்கு வருகின்றது. டி.சி.டி.எஸ் என்பது பொதுமைப்படுத்தப்பட்ட முன்னுரிமைத் திட்டம்+ (ஜி.எஸ்.பி.) ஐ மாற்றுவதாகும். இந்த புதிய திட்டமானது   92 சதவீத பொருட்களுக்கு இங்கிலாந்துடன் சுங்கவரியின்றி வர்த்தகம் செய்ய இலங்கையை அனுமதிக்கிறது. இது இங்கிலாந்து சந்தையில் இலங்கை தயாரிப்புகளின் போட்டித்தன்மையை அதிகரிக்க வழிவகுக்கிறது […]