இலங்கை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • June 25, 2023
  • 0 Comments

இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மாத்திரமே இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் வேலைவாய்ப்புகள் உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்ற மற்றுமொரு குழுவினர் நாளை திங்கட்கிழமை (26) இஸ்ரேல் செல்லவுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி முதல் இஸ்ரேலில் தாதியர் துறையில் […]

இலங்கை

தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்? மஹிந்த யாப்பா அபேவர்தன

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட 5 புதிய உறுப்பினர்கள் தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் கூடிய அரசியலமைப்பு பேரவை, தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்துள்ளது. முன்னாள் தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா […]

இந்தியா

எகிப்து அதிபருடன் சந்திப்பு; நாட்டின் உயரிய ஆர்டர் ஆப் தி நைல் விருது வழங்கி பிரதமர் மோடிக்கு கவுரவம்

பிரதமர் மோடி எகிப்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவரை அந்நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும். எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். உலகப் போரின்போது வீர மரணம் அடைந்த 3,799 இந்திய படைவீரர்கள் நினைவாக […]

வட அமெரிக்கா

நீர்மூழ்கிக் கப்பல் விபத்து குறித்து விசாரணை – கனடிய பாதுகாப்பு போக்குவரத்து சபை

  • June 25, 2023
  • 0 Comments

நீர் மூழ்கிக் கப்பல் விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என கனடிய பாதுகாப்பு போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. பிரபல டைட்டானிக் கப்பலின் இடுப்பாடுகளை பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளை தாங்கிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று அண்மையில் விபத்துக்குள்ளானது.இந்த விபத்து காரணமாக குறித்த நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் குறித்த நீர் மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளான விதம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது.இந்த விபத்து […]

இந்தியா

புதுமண தம்பதி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 5பேரை கோடாரியால் வெட்டிக்கொன்ற சகோதரன்

  • June 25, 2023
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியை சேர்ந்தவர் ஷிவ் வீர் ( 28). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே ஷிவ் வீரின் சகோதரன் சோனுவுக்கு ( 20) சோனி என்ற பெண்ணுடன் 23ம் திகதி திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம் திருமண நிகழ்ச்சிக்கு பின் இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது இன்று அதிகாலை 5 மணியளவில் ஷிவ் வீர் தான் வைத்திருந்த கோராடியால் வீட்டின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்த சகோதரன் சோனு அவரது மனைவி சோனியை கொடூரமாக […]

ஐரோப்பா

உக்ரைன் போர்க்களத்துக்கே திரும்பிய வாக்னர் குழு … மகிழ்ச்சியில் ரஷ்யர்கள்

  • June 25, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் இருந்து வாக்னர் கூலிப்படையினர் வெளியேறியதால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உக்ரைன் போரில் தங்கள் வீரர்கள் 2000 பேர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ரஷ்யாவுக்கு எதிராக திரும்பிய அந்நாட்டு கூலிப்படையான வாக்னர் குழு, ரோஸ்டாவ் நகரை கைப்பற்றியது. இதனால் போர் பதற்றம் உருவானதால் மக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், பெலாரஸ் அதிபர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து, மீண்டும் உக்ரைன் போர்க்களத்துக்கே திரும்ப ஒப்புக் கொண்ட வாக்னர் குழு ஆயுதங்களுடன் ரஷ்யாவில் இருந்து வெளியேறியது. அப்போது கார் […]

இந்தியா

திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி 75வயது மூதாட்டியிடம் மோசடி; 2 வாலிபர்கள் கைது

  • June 25, 2023
  • 0 Comments

மும்பை மாட்டுங்கா பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமூக வலைதளம் மூலம் ஆசாமி ஒருவர் தன்னை ஜெர்மனியை சேர்ந்தவர் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மூதாட்டியும் அது மோசடி ஆசாமி என தெரியாமல் பேசி வந்துள்ளார். ஒருநாள் அந்த நபர் மூதாட்டியை திருமணம் செய்ய விரும்புவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதில் மூதாட்டி மயங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் மூதாட்டிக்கு விலை உயர்ந்த அன்பளிப்பை அனுப்பி இருப்பதாக […]

இலங்கை

மகாவலி கங்கையில் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி

  • June 25, 2023
  • 0 Comments

கண்டி – மகாவலி கங்கையில் நீடாச் சென்ற பாடசாலை மாணவர்கள் இரண்டு பேரில் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மற்றொரு மாணவன் காப்பாற்றப்பட்டு, ​ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இருவரும் கண்டியில் உள்ள பிரதான பாடசாலையில் கற்கின்ற 15 வயதுடைய மாணவர்கள் ஆவர். காப்பாற்றப்பட்ட மாணவன் அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

வட அமெரிக்கா

சிறைச்சாலைக்குள் இருந்து பாடல் காணொளி வெளியிட்ட கொலைக்குற்ற கைதி

  • June 25, 2023
  • 0 Comments

கனடாவில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரபல இசைக்கலைஞர் ஒருவர் சிறைச்சாலையில் இருந்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் இந்த காணொளி கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி ராப் இசை கலைஞரான ரப்பர் டாப் 5 என்ற பெயரையுடைய ஹசன் ஹலீ என்பவர் இவ்வாறு காணொளி என்று வெளியிட்டுள்ளார்.மாணவர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான குறித்த இசைக்கலைஞர் தற்பொழுது ஒன்றாரியோவின் சிறைச்சாலை ஒன்றில் […]

மத்திய கிழக்கு

தென்னாபிரிக்காவில் இடிந்து விழுந்த தங்க சுரங்கம் – பலியான 31 பேர்

  • June 25, 2023
  • 0 Comments

தென்ஆப்பிரிக்காவில் அழிந்து வரும் கனிம வளங்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஏராளமான தங்கச் தங்கச் சுரங்கங்களை அந்நாட்டு அரசாங்கம் மூடி வருகிறது இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 31 தொழிலாளர்கள் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். கடந்த மாதம் 18ம் திகதி சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தபோது இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், […]