இலங்கை

நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு; யாழ். மக்கள் போராட்டம்

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் சில பிரதேச செயலகங்கள் கூடிய மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்தனர். குறிப்பாக இன்று (26) கோப்பாய் பிரதேச செயலகம் முன்பாக கூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், […]

உலகம்

ஹோண்டுராஸில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு!

  • June 26, 2023
  • 0 Comments

வடக்கு ஹோண்டுராஸில் உள்ள குளம் மண்டபத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக  ஜனாதிபதி கியோமாரா காஸ்ட்ரோ அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு, உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். கோர்டெஸ் மாகாணத்தில் உள்ள சோலோமா நகரில் நடைபெற்ற இந்ததாக்குதலில்  10 ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்தனர். சான் பருத்தித்துறை சுலா நகரில் உள்ள ஒரு பேக்கரியில் வியாழக்கிழமை மூன்று பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த படுகொலை நடந்துள்ளது. இதேவேளை  மத்திய ஹோண்டுராஸில், உள்ள சிறையில் […]

உலகம்

சர்ச்சைகளுக்கு மத்தியில் 2வது முறையாக பிரதமர் ஆனார் மிட்சோடாகிஸ்

பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான கிரீஸ் அரசாங்கம், தொலைபேசி ஒட்டுக்கேட்கும் ஊழல்கள் மற்றும் பெப்ரவரியில் ஒரு பெரிய ரயில் விபத்து காரணமாக பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அவரது அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பது தெரியவந்தது. அப்போது பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து கடந்த மே 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது.அதில், பிரதமர் மிட்சோடாகிஸ் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி 158 […]

இலங்கை

வெளிநாட்டில் வேலை பெற்றுதருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த மூவர் கைது!

  • June 26, 2023
  • 0 Comments

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக தெரிவித்து 109 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி செய்த முகவர் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவருக்கு உதவி வழங்கிய பெண் ஒருவர் உட்பட  மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் பல்வேறு வெளிநாடுகளில் தொழில் பெற்றுதருவதாக கூறி 109 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் இதற்கு முன்னர் […]

இலங்கை

யாழில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது

யாழ்.சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் யாழ்.காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டி பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் சுமார் 5 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை மாவட்ட குற்றதடுப்பு பொலிஸ் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிதரஷன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், நடத்திய விசாரணைகளில் அளவெட்டி பகுதியை […]

பொழுதுபோக்கு

கண் பார்வை குறைபாடு உள்ளவர்களும் தெளிவாக டிவி பார்க்கலாம் – சாம்சங் அறிமுகம் செய்த புதிய அம்சம்!

சாம்சங் நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஸ்மார்ட்போன், தொலைகாட்சி சந்தைகளில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சாம்சங் சமீபத்தில் தான் கேலக்ஸி F54 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் தனது 2023 டிவி மற்றும் மானிட்டர் மாடல்களில் புதிய அம்சத்தை வழங்குகிறது. புதிய அம்சம் சீகலர்ஸ் மோட் (SeeColorsMode) என்று அழைக்கப்படுகிறது. புதிய அம்சம் நிறங்களை கண்டறியும் குறைபாடு கொண்டவர்களுக்கும் சிறப்பான வியூவிங் அனுபவத்தை […]

இலங்கை

port cityயில் 1.2 பில்லியன்களை முதலீடு செய்யும் சீன நிறுவனம்!

  • June 26, 2023
  • 0 Comments

கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின்  சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனியின் (CHEC) தலைவர் (Bai Yinzhan) இந்த தகவலை உறுதிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனியின் தலைவர் Bai Yinzhan ஐ இன்று (26.06) சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 […]

இலங்கை

சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் குறித்த அறிவிப்பு!

  • June 26, 2023
  • 0 Comments

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து விவாதிக்க சிறப்பு அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை (ஜூன் 28) அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30.06) பாராளுமன்றத்திலும் பொது நிதி தொடர்பான குழு முன்னிலையிலும் (COPF) சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். பாரிஸில் புதிய உலகளாவிய நிதி  ஒப்பந்தத்திற்கான உச்சிமாநாட்டின் பக்கவாட்டில் FRANCE 24 க்கு அளித்த பேட்டியில் பேசிய ஜனாதிபதி  இந்த […]

இலங்கை

இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி தொட ர்பில் வெளியான புதிய தகவல்

இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது என வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், உறுதியளிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்யும் தீர்மானத்தை ரத்து செய்யுமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு திங்கட்கிழமை (26) விசாரணைக்கு வந்த போதே வனஜீவராசிகள் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோகர ஜயசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட 27 […]

பொழுதுபோக்கு

யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இலங்கைக்கு வந்த KPY பிரபலங்கள்….

  • June 26, 2023
  • 0 Comments

விஜய் தொலைக்காட்சின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் மூலம் தமிழர்களின் மனங்களை வென்ற பாலா மற்றும் வினோத் ஆகியோர் தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். புங்குடுதீவின் மலரும் நினைவுகள் Dinner night 2023 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செல்வா பலஸ் மண்டபத்தில் கலகலப்பான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் இருவரும் அதில் பங்கேற்கவுள்ளனர். குறிப்பாக புங்குடுதீவு மக்கனை ஒன்றிணைத்து அவர்களின் பழைய மலரும் நினைவுகளை மீட்டு சந்தோசத்தை கூட்டுகின்ற […]

error: Content is protected !!