ஆசியா செய்தி

உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூர் விமான நிலையம் தெரிவு

  • April 18, 2023
  • 0 Comments

உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று (16) நெதர்லாந்தில் நடைபெற்ற Skytrax World Airport Awards நிகழ்வில் உலகின் சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் விருது பெற்றது. சிறந்த சாப்பாட்டு வசதிகளைக் கொண்ட விமான நிலையம் மற்றும் உலகின் சிறந்த ஓய்வு வசதிகளைக் கொண்ட விமான நிலையம் என விருது வழங்கப்பட்டது. முதல் இருபது விமான நிலையங்களில் கத்தாரின் தோஹா ஹமாத் விமான நிலையம் […]

இந்தியா செய்தி

இந்தியா-பாக்கிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்தது குடும்பம் 75 ஆண்டுக்கு பின் ஒன்று சேர்ந்தது.

  • April 18, 2023
  • 0 Comments

75 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த குருதேவ் சிங், தயா சிங்கின் குடும்பத்தினர் ஆட்டம் ஆடி, பாட்டு பாடி, மலர்கள் தூவி மகிழ்ச்சியாக மீண்டும் ஒன்றிணைந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. சுதந்திரத்துக்கு முன்பு அரியானாவின் மகிந்திரகர் மாவட்டத்தின் கோம்லா கிராமத்தில் சகோதரர்கள் குருதேவ் சிங், தயா சிங் மறைந்த தங்களது தந்தையின் நண்பர் கரீம் பாஷ் உடன் வசித்து வந்ததாகவும், கரீம் பாஷ்  இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜாங் […]

இந்தியா செய்தி

ஊடகவியலாளர்களிடம் கோபத்தை வெளிப்படுத்திய சைஃப், கரீனா கபூர்

  • April 18, 2023
  • 0 Comments

பொலிவூட்டின் சூப்பர்ஸ்டார் ஜோடிகளான சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களிடம் தமது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியொன்று பரபப்பாகியுள்ளது. பொலிவூட் நட்சத்திரமான மலாய்கா-அம்ரிதா அரோராவின் தாய் ஜாய்ஸின் 70வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட தம்பதியரை தொல்லை செய்ய பின்தொடர்ந்த ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சயீப் அலி கான் அதிரடியாக பதிலளித்துள்ளார். சைஃப் மற்றும் கரீனா, கருப்பு உடையில், கைகளைப் பிடித்துக் கொண்டு, கட்டிடத்திற்குள் விரைந்து செல்ல முயன்றுள்ளனர். இருப்பினும், புகைப்படக் கலைஞர்கள் […]

இந்தியா செய்தி

மேக்கப் போட்டதால் திடீர்னு வீங்கி கருமையாகிய மணப்பெண் முகம்.. திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை!

  • April 18, 2023
  • 0 Comments

மேக்கப் போட்ட இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் கல்யாணமே நின்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் ஒரு இளைஞருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. கடந்த வாரம் அவர்கள் 2 பேருக்குமே நிச்சயதார்த்தம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.திருமணம் 2ம் திகதி அதாவது நேற்று முன்தினம்தான் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அரிசிகெரேயில் திருமணத்துக்கான ஏற்பாடுகளும் ஏற்பாடாகி கொண்டிருந்த வேளையில் அதற்கு 2 நாட்களுக்கு முன்பு, மேக்கப் […]

இந்தியா செய்தி

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்காக முன் பதிவு செய்வது குறித்து அறிவுறுத்தல்!

  • April 18, 2023
  • 0 Comments

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்காக முன் பதிவு செய்யும் பக்தர்கள், இனி ஆதார் அட்டை மூலம் மட்டுமே முன் பதிவு செய்ய முடியும் என திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை நிர்வாகி கூறுகையில், ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு வரும் நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மூவாயிரம் கோயில்கள் வரை கட்டும் பணி திட்டமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆந்திர […]

ஆசியா செய்தி

தனது நாட்டில் புதிய இராணுவதளங்களை அமைப்பதற்கு வருமாறு ரஷ்யாவிற்கு அழைப்புவிடுக்கும் சிரியா!

  • April 18, 2023
  • 0 Comments

சிரியா தனது நாட்டில் புதிய இராணுவ தளங்களை அமைப்பதற்கும் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் ரஷ்யாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. கிரெம்ளினில் புட்டினை சந்தித்த சிரிய அதிபர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன்போதே அவர் மேற்படி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சிரியாவில் ரஷ்ய இருப்பை விரிவுபடுத்துவது ஒரு நல்ல விஷயம் என்று நாங்கள் நினைக்கிறோம் என்றும், ரஷ்யாவின் இராணுவ பிரசன்னம் தற்காலிகமாக எதையும் அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாஸ்கோ தற்போது சிரியாவில் உள்ள […]

இந்தியா செய்தி

குற்றச்சாட்டுக்கள் பொய்யென நிரூபணமாகும்வரை அமைச்சுப்பதவிகளிலிருந்து விலகியிருப்பதாக மனீஷ் சிஸோடியா அறிவிப்பு

  • April 18, 2023
  • 0 Comments

இந்தியத்தலைநகர் புதுடில்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிஸோடியா ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டதைத்தொடர்ந்து, அவர் அனைத்து அமைச்சுப்பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார். தனக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என நிரூபணமாகும் வரை தான் அமைச்சுப்பொறுப்புக்களிலிருந்து விலகியிருப்பதாக மனீஷ் சிஸோடியா அவரது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். புதுடில்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிஸோடியா, மதுபானம்சார் கொள்கை தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டார். இருப்பினும் அவரும், அவரது ஆம் ஆத்மி கட்சி பிரதிநிதிகளும் அக்குற்றச்சாட்டை மறுத்திருக்கும் நிலையிலேயே, […]

இந்தியா செய்தி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரிப்பு

  • April 18, 2023
  • 0 Comments

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் கொள்முதல் விலை ரூ. 343.9719 விற்பனை விலை ரூ. 356.7393 நேற்று :- கொள்முதல் விலை ரூ. 351.7219 விற்பனை விலை ரூ. 362.9543 இலங்கை மத்திய வங்கி உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளது

ஆசியா செய்தி

இந்தோனேசியா கால்பந்தாட்ட போட்டி : சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 138 ஆக உயர்வு!

  • April 18, 2023
  • 0 Comments

இந்தோனேஷியாவில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு 18 மாத சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஜாவாவின் மாலாங் நகரில் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால்  40 சிறார்கள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர். பார்வையாளர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்ததையடுத்து  அரங்கிலிருந்து பார்வையாளர்கள் […]

இந்தியா செய்தி

இந்தியாவில் ஐபோன் தயாரிக்கவுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவிப்பு

  • April 18, 2023
  • 0 Comments

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில்  300 ஏக்கர் பரப்பளவில் அமையும் தொழிற்சாலையில் ஐபோன்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்  மத்திய தகவல் இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் அறிவித்துள்ளனர். இதற்காக ஐபோன்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு பெங்களூர் புறநகர்ப் பகுதியில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. உள்ளூரில் உற்பத்தியை துவக்க, இந்த தொழிற்சாலையில் 700 மில்லியன் டொலர் முதலீடு செய்யும் திட்டத்தில் தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் […]