ஐரோப்பா செய்தி

ரஷ்யாவிற்கு எதிராக போரில் களமிறங்கிய பிரித்தானிய படைகள் – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்

அமெரிக்க உளவுத் துறையின் ரகசிய ஆவணங்கள் கசிவு மூலம்இ ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு விமானப் படை செயல்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் கடந்த வார இறுதியில் இணையத்தில் கசிந்ததை தொடர்ந்துஇ அவை உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ரகசிய ஆவணங்களில் இருந்து அடுத்தடுத்து திடுக்கிடும் விவரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில்இ சமீபத்தில் வெளியான செய்தி மூலம் போருக்கு முன்னதாக ரஷ்யாவிற்கு சுமார் 40இ000 ராக்கெட்டுகளை வழங்க எகிப்து ரகசியமாக திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.

இது மேற்கத்திய நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில்இ தற்போது உக்ரைனில் போரில் ரஷ்ய படைகளுக்கு எதிராக பிரித்தானிய சிறப்பு படை பிரிவு நிலைநிறுத்தப்பட்டு இருப்பதாக வெளிபாடுகள் தெரியவந்துள்ளது.

கசிந்த கோப்புகளில் மூலம் 50 பிரித்தானிய சிறப்பு படைகள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும்இ அதில் பெரும்பாலும் எலைட் ஸ்பெஷல் ஏர் சர்வீஸ் (எஸ்.ஏ.எஸ்) படைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content