இலங்கை

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் விடுதலை!

மியான்மரில், சைபர் பயங்கரவாத குழுக்களின் பிடியில் சிக்கியிருந்தவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த  8 இலங்கையர்களும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில தினங்களில் அவர்கள் இலங்கை வரவுள்ளதாக தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் உள்ள தாய்லாந்து நட்புறவுப் பாலம் ஊடாக இன்று காலை மியன்மார் குடிவரவு அதிகாரிகள் குழுவை கையளித்ததாகவும் அவர் கூறினார்.

அதன்படி தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் குறித்த இலங்கையர்களின் குழு தற்போது நலமுடன் இருப்பதாகவும், அடுத்த சில தினங்களில் அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content