ஆசியா

மலேசியாவில் இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு கடத்தி வந்த கணவன்-மனைவி கைது!

மலேசியக் கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கைக் குழந்தைகளை ஐரோப்பாவிற்கு கடத்திவந்த திட்டமிட்டிருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

கோலாலம்பூரில் மலேசிய சர்வதேச கடவுச்சீட்டை (MIP) பயன்படுத்தி இலங்கை குழந்தைகளை ஐரோப்பாவிற்கு கடத்தும் கும்பலை அமபலப்படுத்தியுள்ளதாக மலேசிய குடிவரவு திணைக்களம் இன்று அறிவித்தது.

Bahnu Internationals சிண்டிகேட் என ஒரு உண்மையான நிறுவனம் போல பெயரிடப்பட்ட இந்த குழுவின் மூளையாக செயல்பட்ட 26 மற்றும் 37 வயதுடைய உள்ளூரைச் சேர்ந்த கணவன்-மனைவியை ஏப்ரல் 12ம் திகதி கைது செய்ததாக குடிவரவுத் திணைக்களத்தின் இயக்குநர் ஜெனரல் ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார். ரஸ்லின் இன்று (19) வெளியிட்ட ஒரு அறிக்கையில், பாஸ்போர்ட் தயாரிக்கும் போர்வையில் குடிவரவு அலுவலகத்திற்கு தங்கள் 12 வயது குழந்தையின் பிறப்புச் சான்றிதழைக் கொண்டு வரும்படி இந்த குழு பெற்றோரை நம்ப வைக்கும் என்று கூறினார்.

Husband,

பின்னர் கவுண்டருக்கு வரும்போது, ​​அழைத்துவரப்பட்ட குழந்தைக்கு பதிலாக அதே வயதை ஒத்திருக்கும் இலங்கையிலிருந்து வந்த வேறு குழந்தை புகைப்படம் எடுப்பதற்கும் கைரேகை பதிவுக்கும் அனுப்பப்படும், என்று அவர் கூறினார்.இதன்மூலம் கடவுச்சீட்டை வெற்றிகரமாகப் பெற்றுக் கொண்ட இலங்கைப் பிள்ளைகளை ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்படுவர். மேலும், அவர்களை அழைத்துச் செல்லும் கடத்தல்காரர்களாகவும் இந்த தம்பதியே செயல்படுவார் என்றும் ரஸ்லின் கூறினார்.

எத்தனை குழந்தைகள் இதில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் சிண்டிகேட் எவ்வளவு காலம் செயல்பட்டது என்பதைக் கண்டறிந்து தீர்மானிக்க விசாரணைகள் நடந்து வருகின்றன.முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பாஸ்போர்ட்டைப் பெற்று ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் 30,000 முதல் 50,000 யூரோக்கள் வரை இந்த கடத்தல் கும்பலுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content