இலங்கை செய்தி

மக்கள் ஆணையை மீறாதீர்: அமைச்சர்களுக்கு பேராயர் ஆலோசனை

“நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

“நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து, கொழும்பு மறைமாவட்டப் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு நேற்று (06) தெளிவுபடுத்தப்பட்டது.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் பேராயரைச் சந்தித்து, இந்த உத்தேச சட்டமூலம் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் தெரிவித்ததாவது:

“நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குதல் உள்ளிட்ட பல மறுசீரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாகவே அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், இது குறித்துச் சமூகத்தில் தவறான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையிலேயே இந்தச் சட்டமூலத்தின் உண்மையான நோக்கம் குறித்துப் பேராயருக்குத் தெளிவுபடுத்தினோம்.

நாடு, நாட்டு மக்கள் மற்றும் நீதித்துறைக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களை மாத்திரம் முன்னெடுக்குமாறு பேராயர் எமக்கு ஆலோசனை வழங்கினார்.

இதேவேளை, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு நேரம் கோரியுள்ளனர். இது குறித்து நான் ஜனாதிபதியின் கவனத்திற்குக்கொண்டு சென்றுள்ளேன்; விரைவில் அச்சந்திப்பு நடைபெறும் என நம்புகிறேன்” என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை