ஐரோப்பா செய்தி

புடினுக்கு எதிரான கைது நடவடிக்கை தொடர்பில் ஜேர்மன் வெளியிட்டுள்ள கருத்து!

ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், பல தலைவர்கள் ICCயின் முடிவை வரவேற்றுள்ளனர்.

உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தி ரஷ்ய தலைவர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ICC குற்றம் சாட்டி, பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த வாரண்ட் மூர்க்கத்தனமானது , அர்த்தமற்றது என்று கிரெம்ளின் கூறியது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ICCயின் முடிவை வரவேற்றுள்ளார்.யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை இது காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க்குற்றங்களை விசாரிக்க சரியான நிறுவனம்.

யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதுதான் உண்மை. அதுதான் இப்போது தெளிவாகிறது என்று ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் டோக்கியோவில் நடந்த கூட்டு செய்தி மாநாட்டில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content