ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் தொடரும் வன்முறைகள் – 77 அதிகாரிகள் காயம் – 45 பேர் கைது

பிரான்ஸில் வியாழக்கிழமை இடம்பெற்ற 11 ஆவது நாள் ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே பலத்த மோதல் வெடித்தது.

இதில் 77 அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Glacière பகுதியில் மாலை 6 மணி அளவில் போராட்டக்காரர்கள் ஜொந்தாமினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் இரு அதிகாரிகள் காயமடைந்தனர். Boulevard du Montparnasse பகுதியிலும் வன்முறை வெடித்தது. ஆர்ப்பாட்ட முடிவில் பரிசில் 77 அதிகாரிகள் காயமடைந்ததாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

காயமடைந்த அதிகாரிகளில் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்தவார ஆர்ப்பாட்டத்தில் 105 அதிகாரிகள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content