இலங்கை

நியூசிலாந்து செல்ல முயற்சித்த 6 இலங்கையர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

இலங்கையர்கள் 6 பேர் நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயன்ற போது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலுள்ள 3 அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த அகதிகளுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் படகு மூலம் நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக பொலிஸாரின் கியூ பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பூம்புகாரில் உள்ள படகு உரிமையாளர் ஒருவரிடம் படகு வாங்க முன்பணம் கொடுத்துள்ளதாக பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் குளத்துவேப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் கெரவலப்பள்ளி மற்றும் வேலூர் மாவட்டம் குடிமல்லூர் முகாம் ஆகிய இடங்களில் தங்கியிருந்த ஆறு அகதிகள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content