ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் இருந்து இலங்கை செல்பவர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது பிரஜைகளுக்கான பாதகமான பயண வழிகாட்டியை நீக்க முயற்சிப்பதாக ஜெர்மனி வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு சுற்றுலா சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரியந்த ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜெர்மனி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் Dr. Dietmar Doeren, தவறான தகவலின் அடிப்படையில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் பயண வழிகாட்டியை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கோ அல்லது அவற்றின் விநியோகத்திற்கோ தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் கூறினார்.

அடுத்த சில வருடங்களில் இலங்கைக்கு சுமார் 9 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்றும், அவ்வாறு நடந்தால் இலங்கை சர்வதேச நாணய நிதியம் அல்லது வெளிநாட்டு கடனாளிகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content