செய்தி தமிழ்நாடு

கன்னியாகுமரியின் இரும்பு மனிதன் ஸ்பெயினின் அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதனாக மாற பயிற்சி

கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாபில் அகில உலக அளவிலான இரும்புமனிதன் போட்டி நடந்தது. தமிழ்நாடு சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுட்டிவிளையை சேர்ந்த கண்ணன் கலந்து கொண்டு வெள்ளிபதக்கம் பெற்றார். 2023 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்புமனிதன் போட்டி வரும் அக்டோபர் மாதம் 13,14,15,தேதிகளில் ஸ்பெயினில் வைத்து நடைபெறுகிறது. இந்தியா சார்பில் போட்டியில் கலந்து கொள்ள கண்ணன் தேர்வாகி உள்ளார். இதற்காக இன்று நாகர்கோவில் அருகேயுள்ள சங்கு துறை பீச்சில்
5 டன் மினி லாறியும் 270kg கொண்ட இரண்டு இருசக்கர வாகனத்தையும் ஒரே நேரத்தில் இழுத்தும் தூக்கி நடந்தும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார் இரும்புமனிதர் கண்ணன்.
இதுகுறித்து அவர் கூறும்போது வெளி நாட்டில் நடக்கும் உலக அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தமிழ் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பேன் என கண்ணன் தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content