இலங்கை

ஐஸூடன் கைதான சந்தேகதபர் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்க திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை-மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த சந்தேக நபரை சோதனை இட்ட போது அவரிடமிருந்து 11g ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் -இக்கிரிகொல்லாவ பகுதியில் வசித்து வரும் அக்பர் முஹம்மது ரிபான் (35) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து மோட்டார் சைக்கிளில் அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவரை சோதனையிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபருக்கு பல நீதிமன்றங்களில் வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் புலன் விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content