இலங்கை செய்தி

ஐரோப்பிய நாட்டில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கை வந்த ஜேர்மனிய பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளிகப்பட்டுள்ளது.

காலி – ஹபராதுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றிலுள்ள உடற்பிடிப்பு நிலையமொன்றுக்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளர்.

இது தொடர்பில், அதன் ஊழியரான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

65 வயதான சுற்றுலாப் பயணி ஹபராதுவ காவல்நிலையத்துக்கு அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உடற்பிடிப்பின்போது, சந்தேகநபரான ஊழியர் தமது அந்தரங்க பாகங்களை ஸ்பரிசம் செய்ததாக குறித்த பெண் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரான விடுதி ஊழியர், இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது.

அவர் இன்று காலி நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹபராதுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content