பயணம்

இலங்கை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் – அறிமுகமாகும் செயலி

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான தகவல்களை வழங்குவதுடன் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக சுற்றுலாத்துறைசார் செயலி ஒன்றை வடிவமைப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.

அச்செயலியில் பிரதான 7 மொழிகளில் அவசியமான அனைத்துத் தகவல்களும் உள்ளடக்கப்படும் அதேவேளை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள முச்சக்கரவண்டிகளின் விபரங்களும் சேர்க்கப்படவுள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, இலங்கையில் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் அச்செயலியில் உள்ளடக்கப்படுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான நடைமுறைகள் பற்றிய விபரங்களும் அச்செயலியில் உள்ளடக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுற்றுலாத்துறைசார் செயலி இம்மாத இறுதியில் வெளியிடப்படுமெனவும், இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயன்முறை மேலும் இலகுபடுத்தப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பயணம்

பிரான்ஸ் ரயிலில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரான்ஸில் ட்ராம் ரயிலில் வைத்து இளம் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெப்ரவரி 27 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பயணம்

சாக்கடல் போல இந்த ஏரியிலும் நீங்கள் மூழ்காமல் மிதக்கலாம் : எங்கு இருக்கிறது தெரியுமா?

நீச்சல் தெரியாது ஆனால் பெரிய நீர்நிலையில் குளிக்க வேண்டும் என்று ஆசை என்று சொன்னதும் எல்லோர் நினைவிற்கு வரும் ஒரு பெயர் சவக்கடல், சாக்கடல், என்றெல்லாம் அழைக்கப்படும்

You cannot copy content of this page

Skip to content