ஆஸ்திரேலியா

அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு விடயங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் கைது!

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தகவல்களை வெளிநாடுகளிற்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிட்னியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் தேசிய புலானய்வு அமைப்பும் பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் பொன்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சேர்கோ வெளிநாடொன்றிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை புத்திஜீவிகளின் அமைப்பை சேர்ந்தவர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்புகொண்டு சேர்கோ தனது இரண்டு பிரதிநிதிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்ற இருவர் சேர்கோவை சந்தித்து அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு பொருளாதாரம் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்கள் குறித்து தகவலை வழங்கினால் அவருக்கு பணம் வழங்க தயார் என தெரிவித்துள்ளதாக  அவுஸ்திரேலிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதன் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் அறிக்கைகளை தயாரித்து அவற்றினை வழங்கி பணம் பெற்றுள்ளார்.

சேர்கோவை சந்தித்த இருவரும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள்  அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு பொருளாதார புலனாய்வு தகவல்களை வழங்குவதற்காக பணம் செலுத்தினார்கள் என காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content