செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கிய சூறாவளி – 20க்கும் அதிகமானோர் மரணம்

அமெரிக்காவை உலுக்கிய கடுமையான சூறாவளியால் மழையில் சிக்கி 21 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் காயமடைந்தனர்.

தெற்கு, மத்திய மேற்குப் பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய சூறாவளி கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இடிபாடுகளுக்குள்ளே தேடல் தொடர்வதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

அர்க்கன்ஸா (Arkansas), அலபாமா (Alabama), இலனோய் (Illinois), இண்டியானா (Indiana) உள்ளிட்ட 6 மாநிலங்களில் சூறாவளி சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அர்க்கன்ஸா மாநிலத்தில் சூறாவளியில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இண்டியானாவில் மேலும் மூவர் உயிரிழந்தனர்.

இலனோயில் ஒரு திரையரங்கின் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். அப்போது சுமார் 260 பேர் திரையரங்கின் உள்ளே இருந்தனர்.

15 மில்லியன் பேர் வசிக்கும் டெக்ஸஸிலிருந்து (Texas) விஸ்கோன்சின் (Wisconsin) வரை சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிகாகோ, டெனஸ்ஸி, இண்டியானாபொலிஸ் (Chicago, Tennessee, Indianapolis) ஆகிய நகரங்களையும் சூறாவளி கடந்து செல்லக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content