அரசியல் இலங்கை செய்தி

புதிய அரசமைப்புக்கான அரசியல் சமர் விரைவில் – எதிரணி அறிவிப்பு

"புதிய அரசியலமைப்புத் தொடர்பில் இந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியல் ரீதியில் அழுத்தம் கொடுக்கும் வேலைத்திட்டத்தை எதிரணி விரைவில் ஆரம்பிக்கும்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

“புதிய அரசியலமைப்புத் தொடர்பில் இந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியல் ரீதியில் அழுத்தம் கொடுக்கும் வேலைத்திட்டத்தை எதிரணி விரைவில் ஆரம்பிக்கும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் மற்றும் புதிய அரசியலமைப்பு ஆகியன தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய எதிரணியின் வேலைத்திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர எம்.பி. மேலும் கூறியவை வருமாறு:

“இதற்கானதொரு அரசியல் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை நாம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளோம்.

எனினும், தெரிவுக்குழுவை அமைத்து நேரத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. இதற்கிடையில் 22 ஆவது திருத்தச் சட்ட மூலமும் வந்துள்ளது.

புதிய அரசியலமைப்பு குறித்து எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றார்.

எனவே, புதிய அரசியலமைப்பை உருவாக்க வைப்பதற்குரிய அரசியல் வேலைத்திட்டத்தை நிச்சயம் நாம் ஆரம்பிப்போம். அது எமது பிரதான அரசியல் வேலைத்திட்டங்களில் ஒன்றாக அமையும்” என்று அவர் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை