செய்தி வட அமெரிக்கா

கனடாவில் AI தொழில்நுட்பத்தால் தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

கனடாவில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடந்த மோசடியில் 21,000 டொலரை தம்பதியினர் இழந்துள்ளனர்.

கனடாவை சேர்ந்த ரூத் கார்டு (வயது 73 ) மற்றும் அவரது கணவர் கிரெக் கிரேஸ் (வயது 75) எனும் தம்பதியினருக்கு அண்மையில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் அவர்களது பேரனை போல ஒரு குரல் பேசியுள்ளது. அதில் ஒருவர் குறுக்கிட்டு ஒரு பெரிய வழக்கில் உங்கள் பேரன் சிக்கியுள்ளார். அவரிடம் போன், பர்ஸ் ஆகியவை இல்லை. என கூறி ஜாமீன் வாங்க பணம் தேவை என கூறியுள்ளனர்.

தனது பேரன் சிக்கலில் மாட்டிக்கொண்டதாக நினைத்து தனது பேரனை காப்பாற்ற தங்கள் வங்கி கணக்கில் இருந்து 21,000 டொலரை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் மேலும் பணம் கேட்கவே, அடுத்த வங்கி கிழக்கு தம்பதி விரைந்துள்ளது.

அப்போது அந்த இன்னொரு வங்கி கிளை மேலாளர் அவர்களை தடுத்தி நிறுத்தி, இதுபோன்ற ஒரு சம்பவம் ஏற்கனவே நடைபெற்றதாகவும், இது போலியான அழைப்பு எனவும் கூறியுள்ளார்.

பிறகு தம்பதியினருக்கு வந்த அலைப்பில், அவர்களது பேரனை போல பேசியது AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி என்பது தெரிய வந்துள்ளது.

அந்த AI வசதியை கொண்டு தான் ஒரு நபர் இவர்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றியுள்ளான் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வயதான தம்பதியினர் அதிகாரிகளிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content