இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி நேற்றைய தினத்தை விடவும், இன்றைய தினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணமாகும் என அந்த சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
நேற்றைய தினம் 24 கரட் பவுண் ஒன்றின் விலை 145000 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று 155000 மாக பதிவாகியுள்ளது.
அதேநேரம், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, இன்றைய தினம் ஒரு இலட்சத்து 42 ஆயிரம் ரூபாவாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)