இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான்!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/04/151.jpg)
அவசரகால உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிக்காக இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்கவுள்ளது.
இதன்படி ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சி திட்டத்திற்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்குகிறது.
இந்த நன்கொடையானது நான்கு மாத காலத்திற்கு சோளம் மற்றும் சோயா பீன்ஸ் கொள்வனவு மூலம் திரிபோஷா போன்ற வலுவூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக இலங்கைக்கு ஜப்பான் இதுவரை 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முடிந்த அளவு மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அத்தியாவசிய உணவு வழங்கப்படும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்.என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேன்மைதங்கிய மிகொசி ஹிதேகி தெரிவித்தார்.