இலங்கை

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு!

2023 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையிடம் இருந்த கையிருப்பின் பெறுமதி 2 ஆயிரத்து 217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கையிருப்பில் இருந்த 2 ஆயிரத்து 121 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது 4.5 வீத அதிகரிப்பாகும்.

உத்தியோபூர்வ கையிருப்பு சொத்துகளில் உள்ளடக்கப்படும் அந்நிய செலாவணி கையிருப்பதாக 2 ஆயிரத்து 65 மில்லியன் டொலர்களில் இருந்து 2 ஆயிரத்து 183 மில்லியன் டொலர்களாக 5.7 என்ற வீதத்தில் அதிகரித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை மத்திய வங்கி தங்க கையிருப்பானது 29 மில்லியன் டொலர்களில் இருந்து 28 மில்லியன் டொலர்கள் என்ற அளவில் 5.3 வீதமாக குறைந்தது.

அந்நிய செலாவணி கையிருப்பில் சீனாவிடம் இருந்த பெறப்பட்ட 1.4 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி பரிமாற்றல் வசதியும் அடங்குவதாகவும் இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.

இது சில நிபந்தனைகளின் கீழ் பயன்படுத்தும் அடிப்படையில் சீனாவினால் வழங்கப்பட்டுள்ள கடனுதவியாகும்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content