இலங்கை செய்தி

சிவனொளிபாத யாத்திரைக் காலம் நிறைவு

சிவனொளிபாத யாத்திரைக் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக ஸ்ரீபாத விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஸ்ரீ பாத உடமலுவவில் பல்வேறு சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெசாக் பௌர்ணமிக்கு அடுத்த நாளான 31 ஆம் திகதி, ஸ்ரீபாத உட மலுவவில் நடைபெறும் சமயக்கிரியைகளைத் தொடர்ந்து, மேல் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள புனிதப் பேழை, சமன் தெய்வ சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் ஆகியவை கல்பொத்தாவல பெல்மதுளையில் உள்ள ஸ்ரீபாத ராஜமகா விகாரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

புனிதப் பேழை, சமன் தெய்வ சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் ஆகியவை அங்கு வந்தடைந்தவுடன், அடுத்த யாத்திரைக் காலம் ஆரம்பமாகும்

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!