ஐரோப்பா

அயர்லந்தில் மரத்தைத் தூக்கி வீசியதால் 650,000 பவுண்ட் காப்புறுதிப் பணத்தை இழந்த பெண்

அயர்லந்தில் பெண் ஒருவர் கிறிஸ்துமஸ் மரத்தைத் தூக்கி வீசும் போட்டியில் வெற்றி பெற்றதால் சுமார் 650,000 பவுண்ட் காப்புறுதிப் பணத்தை இழந்துள்ளார்.

36 வயது கமிலா கிராப்ஸ்கா கார் விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்காகப் பணம் கோரி காப்புறுதி நிறுவனம் மீது வழக்குத் தொடுத்தார்.

2017ஆம் ஆண்டு நேர்ந்த அந்தக் கார் விபத்தால் தமது முதுகிலும் கழுத்திலும் அடிபட்டதாக அவர் கூறினார். சுமார் 5 ஆண்டுகளுக்குத் தம்மால் வேலைக்குச் செல்ல முடியாது என்றும் பிள்ளைகளுடன் விளையாட முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அவர் 2018ஆம் ஆண்டு 5 அடி உயம் கொண்ட கிறிஸ்துமஸ் மரத்தை தூக்கி எறியும் படம் வெளியானது. படத்தில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தெரிந்தாலும் தாம் வலியில் அவதியுறுவதாக கிராப்ஸ்கா விளக்கினார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content